search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavery Hospital"

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், இன்று மாலை முதல் நாளை திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #DMK
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
    கருணாநிதி உடல்நிலை குறித்து ‘காவேரி’ மருத்துவமனையில் இருந்து தெரிவிக்கப்படும் தகவலுக்காக தொண்டர்கள் தூக்கத்தை தொலைத்தும் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    விதியே இது என்ன சோதனை....?

    ஓய்வறியாத சூரியனை ஒற்றை அறைக்குள் முடக்கினாய். வயது மூப்புதான். ஆனாலும் எங்களை விட்டு அவர் பிரிவதை மனம் ஒப்பவில்லையே!

    எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திய கருணாநிதியின் உடல் நிலையிலும் அதிசயிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன.

    மீண்டு வருகிறார் கலைஞர் என்ற சேதி கேட்டு தொண்டர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. விழி திறந்தார் என்றதும் தொண்டர்கள் விழிகளில் ஆனந்தக் கண்ணீர்!

    வருவார் நம் தலைவர். மீண்டும் அவரது காந்தக் குரலை கேட்கும் காலம் வரும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

    தேறி வருகிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு ‘கருணாநிதி கவலைக்கிடம்’ என்று வந்த தகவல் இடியாய் தாக்கியது.



    மீண்டும் காவேரி நோக்கி ஓடி வந்தார்கள். ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் திரண்டு விட்டனர்.

    இருண்டுபோன நேரம் அவர்களுக்கு தெரியவில்லை. ‘அரசியலில் எவ்வளவோ ‘கெடு’ விதித்த கலைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் ‘கெடு’ என்றதும் தொண்டர்கள் மனம் நொறுங்கி போனார்கள்.

    விடிய விடிய ஆஸ்பத்திரி வாசல். போக்குவரத்து மாற்றப்பட்டதால் சாலைகளில் அமர்ந்தும், படுத்தும் நேரத்தை போக்கி கொண்டிருக்கிறார்கள்.

    தூக்கத்தை தொலைத்த கண்கள். பசியால் உடல் சோர்ந்தாலும் இடைவிடாமல் ‘வா.... வா.... தலைவா....’ என்று உரக்க குரல் எழுப்பி வருகிறார்கள்.

    வயது மூப்பு தவிர்க்க முடியாததுதான். ஆனால் எங்கள் ஆசைக்காக எங்கள் தலைவரை இன்னும் கொஞ்ச நாள் எங்களிடம் விட்டு வை என்று தொண்டர்கள் ஏங்குகிறார்கள்.

    குடும்பத்தோடு வந்தவர்கள்... வீட்டில் கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெண்கள்.... மனைவி, குழந்தைகளை வீட்டில் இருக்க சொல்லி விட்டு வந்த ஆண்கள், வேலைகளை விட்டு விட்டு ஓடோடி வந்த இளைஞர்கள், இளம்பெண்கள்.....



    காவேரி வாசலில் திரண்டிருக்கும் கூட்டம் வடிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலைஞர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது இதுதான்!

    ஆண்டவனே உன்பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க உன்னிடம் கையேந்தினேன்.. மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!

    இன்று மாலைதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவமனை கூறி விட்டது.

    ‘கலைஞர் எப்படி இருக்கிறார்?’ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டார்களா? சென்று வருவோர், போவோரை ஓடி ஓடி சென்று கேட்கிறார்கள்.

    கோவையைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஜெனிபர். போரூரில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். கலைஞர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும் அவரது தந்தை சென்னை விரைந்துள்ளார். தந்தையும், மகளுமாக இன்று அதிகாலையில் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டனர். ஜெனிபர் கூறியதாவது:-

    கலைஞர் எனக்கு தாத்தா மாதிரி. அவரால்தான் நான் படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அவர் உடல்நிலை கவலைக்கிடம் என்றதும் தாங்க முடியவில்லை.

    அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. ரொம்ப சங்கடமாக இருக் கிறது. அவரது நிலையை அறியாமல் இங்கிருந்து போக மனமில்லை.

    அனிதா (கொளத்தூர்): நேற்று மாலையில் கேள்விப்பட்டதும் அவசர அவசரமாக வந்து விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    டாக்டர்கள் 24 மணி நேரம் கெடு சொல்லி இருக்கிறார்கள். கடவுளை நம்பி இருக்கிறோம். அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை உள்ளது.

    வரலெட்சுமி (கொளத்தூர்):- எனக்கு உடம்புக்கு சரியில்லை. வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தேன். கலைஞர் கவலைக்கிடம் என்றதும் புறப்பட்டு வந்தேன்.

    பத்து நாளாக ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவருக்கு வயசு மூப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். தலைவருக்கு அப்படி எதுவும் வராது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து கை அசைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன்.

    கோமளவள்ளி (திருவொற்றியூர்):- கருணாநிதிக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு வில்பவர் அதிகம். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “100 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கு முன்பு எனது உயிர் போனாலும் தமிழுக்காக உயிர் போகும்” என்றார். அவர் போராட்டக்குணம் கொண்டவர். மரண போராட்டத்தில் இருந்து மீண்டு வருவார்.

    அம்மு (ஆயிரம்விளக்கு):- என் குடும்பமே தி.மு.க. குடும்பம். கருணாநிதி உடல்நிலை பற்றி கேள்விபட்டதும் எங்களால் சாப்பிட முடியவில்லை. அவர் உடல்நலத்துடன் இருந்தாலே போதும். அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்விபட்டதும் தூக்கம் வரவில்லை. குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இன்று அதிகாலையிலே வந்து விட்டோம்.

    ரூபன் (சேலம்):- நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்து கேள்விபட்டதும் ரெயில் ஏறி சென்னை வந்து விட்டேன். கருணாநிதி மக்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு சொத்து உரிமை கிடைக்கும்படி செய்தவர். அவரால் நிறைய பேரின் சமூக அந்தஸ்து உயர்ந்துள்ளது. அவரை எப்படியாவது பார்க்கவே வந்தேன். அவர் நலமுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    கல்லை பெரியசாமி (பெரம்பலூர்):- கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்ததும் தூங்க முடியவில்லை. தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் கலைஞர். அவருக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அவரிடம் எந்த மனு கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அனைத்து ஜாதியினரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அவர் எப்போது அறிவாலயம் வருவார், உடன்பிறப்பே என்று எப்போது அழைப்பார் என்று காத்து கொண்டிருக்கிறேன். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital

    காவேரி மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சபாநாயகர் தனபால், தி.க தலைவர் வீரமணி, மற்றும் பா.மா.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இன்று விசாரித்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சபாநாயகர் தனபால் வந்தார். இதனை அடுத்து காவேரி மருத்துவமனைக்கு தி.க தலைவர் வீரமணி வந்தார். இருவரும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.



    இதனை அடுத்து காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திமுக., தலைவரும் எனது நண்பருமான கருணாநிதி விரைவில் குணமடைந்து வருவார். இது எனது விருப்பம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பமும் இதுதான். அனைவரின் ஆசையும் நிறைவேறும் ’ என தெரிவித்தார். #Karunanidhi #DMK
    தி.மு.க. தலைவர் கருணாநிதி முழுமையாக நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #DMK #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி முழுமையாக நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்):- தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். மருத்துவர்கள் கூறிய அனைத்தையும் விளக்கினார். கருணாநிதி முன்பு இருந்ததைவிட இப்போது நன்றாக இருக்கிறார். பூரணமாக குணமடைந்து மீண்டும் பேசும் நிலைக்கு வருவார்.

    ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்):- முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் விரைவில் பரிபூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். திராவிட சூரியன் மென்மேலும் தனது பிரகாரத்தை வெளிப்படுத்த இறைவன் கிருபை செய்யட்டும்.


    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):- தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராக இருந்து வருகிறார்.

    ஆதிக்கம் அற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், ஜாதி மதக்கொடுமையை தரை மட்டம் ஆக்கிடுவோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி போன்ற லட்சியங்களோடு ஆட்சி செய்தவர். தமிழ்மொழியை செம்மொழியாக்கி சாதனை படைத்த அவர் நூற்றாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    வி.ஜி.சந்தோ‌ஷம்:- உலகம் போற்றும் முத்தமிழ் அறிஞர், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி, தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ஆடிட்டர் குருமூர்த்தி:- அரசியல் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும், தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. தமிழகத்துக்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். #DMK #Karunanidhi
    காவேரி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி நலமாக உள்ளதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறினார். #Karunanidhi #Kanimozhi
    சென்னை:

    காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து காலை 10.30 மணிக்கு வெளியில் வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு தற்போது சீராகி விட்டது. நேற்று இரவு ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இன்று அது இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

    தற்போது கருணாநிதி நலமாக உள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #DMK #Karunanidhi #Kanimozhi
    தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக, மக்கள் கடலாக மாறியுள்ளது. #Karunanidhi #KaveryHospital
    சென்னை:

    அன்பு உடன் பிறப்பே.... என்ற காந்த குரல் மூலம் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களை சுண்டி இழுத்தவர் கருணாநிதி. கடந்த 2 ஆண்டுகளாக அந்த காந்த குரல் ஓசையை கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனின் மனதிலும் இருந்தது.

    வயது முதிர்வு காரணமாக முன்பு போல அவரால் பேச இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. தொண்டர்கள் அவரை பார்க்க முடியாமல் தவித்தப்படி இருந்தனர். இந்த நிலையில் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவல் அவர்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.

    கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கோபாலபுரம் 4-வது தெருவில் உள்ள அவர் வீட்டுக்கு படையெடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்த தகவல் பரவிய பிறகு தொண்டர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்துக்கு படையெடுத்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி மு.க.ஸ்டாலின் பல தடவை கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க.வினர் கலைந்து செல்ல மறுத்தனர்.

    நேரம் செல்ல, செல்ல பல்வேறு கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்துக்கு வந்ததால் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது. சென்னை புறநகர் பகுதியில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் புறப்பட்டு வந்தனர்.

    தொண்டர்களைக் கட்டுப்படுத்த கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டை சுற்றி 6 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். என்றாலும் போலீஸ் தடையை மீறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்தபடி இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகிறார்கள். அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

    தலைவர் கலைஞரை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். என்றாலும் தி.மு.க.வினர் கலைந்து செல்லவில்லை.

    மாலையில் தொண்டர்கள் வருகை மேலும் அதிகரித்தது. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்து விட்டனர். இதனால் நேற்று மாலை கோபாலபுரம் பகுதி தொண்டர்கள் வெள்ளமாக காணப்பட்டது.


    நேற்று இரவு தொண்டர்கள் கலையவில்லை. இரவு 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் புறப்பட்டு சென்ற பிறகும் கூட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு முன்பு நின்று கொண்டே இருந்தனர்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்ட தகவல் பரவியதும் மீண்டும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்துக்கு படையெடுத்தனர். கருணாநிதி ஸ்டெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போது ‘‘டாக்டர் கலைஞர் வாழ்க’’ என்று விண் அதிர கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆம்புலன்ஸ் ஆழ்வார்பேட்டைக்கு புறப்பட்டு சென்றதும் கோபாலபுரத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் காவேரி ஆஸ்பத்திரி பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் ‘‘டாக்டர் கலைஞர் வாழ்க’’ என்று கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

    கருணாநிதி உடல்நிலை பற்றி வதந்தி பரவிய காரணத்தால் பொது மக்களும் நள்ளிரவில் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி நோக்கி புறப்பட்டு வந்தனர். ஏராளமான பெண்களும் ஆழ்வார்பேட்டையில் குவிந்தனர்.


    தலைவா.... தலைவா என்று அந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள். அவர்களை அமைதிப்படுத்துவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் படாத பாடுபட்டனர்.

    அதிகாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து ஆ.ராசா வெளியில் வந்து பேசிய பிறகே தொண்டர்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டது.

    இன்று காலை ஆழ்வார்பேட்டைக்கு தொண்டர்கள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் காவேரி ஆஸ்பத்திரி சுற்றுப் பகுதிகள் மனித தலைகளாக, மக்கள் கடலாக மாறியுள்ளது. #DMK #Karunanidhi #KaveryHospital
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் 4 பேர் கொண்ட கூடுதல் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். #DMK #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டபோது, 6-வது முறையாக முதல்- அமைச்சராகி புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை அந்த தேர்தலில் பெற்ற கருணாநிதிக்கு அதன் பிறகு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி எளிதாக மூச்சு விட சிரமப்பட்டார். இதையடுத்து அவருக்கு தொண்டையில் “டிரக்கியாஸ்டமி” எனும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. அவர் சுவாசம் விடுவதில் வழக்கமான நிலை வந்ததும் அந்த டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்படும் என்று டாக்டர்கள் அறிவித்து இருந்தனர்.

    கடந்த 20 மாதங்களாக அவர் செயற்கை குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார். இதனால் அவர் கட்சிப் பணிகள் உள்பட எந்த பணிகளிலும் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் நல்ல உடல் நிலைக்கு மாறியதால் அறிவாலயம் மற்றும் கனிமொழி வீட்டுக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் அவரது தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச குழாயை மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கருணாநிதி கடந்த 18-ந்தேதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு புதிய குழாய் பொருத்திக் கொண்டார். அன்றே வீடு திரும்பிய அவருக்கு சளி தொல்லை அதிகரித்தது.

    இதற்கிடையே சளி தொல்லை காரணமாக கருணாநிதிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் காவிரி ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு டாக்டர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

    இதன் காரணமாக கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அறிவித்தார். என்றாலும் கருணாநிதி உடல்நலம் குறித்து கடந்த 2 தினங்களாக அதிகளவில் வதந்தி பரவியது.

    நேற்று மதியம் கருணாநிதி உடல்நிலையில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். அவரது கை நரம்பு வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டன.

    கருணாநிதியின் உடல்நிலை பற்றி டாக்டர்கள் குழுவினர் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. டாக்டர்கள் குழு அவரை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்கிறது. வீட்டிலேயே அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டு இருந்தது.


    இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அடுத்தடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தனர். இதனால் பரபரப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. அவரை கவனித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் அவரது உடல்நலம் பற்றி திருப்தி தெரிவித்தனர். என்றாலும் டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் கருணாநிதி உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.

    2 நாட்களுக்கு முன்புவரை கருணாநிதி அடிக்கடி நாற்காலியில் அமர்ந்தபடி இருப்பார். மாலையில் நீண்டநேரம் நாற்காலியில் அமர்ந்தபடி அவர் டி.வி. பார்ப்பது உண்டு. ஆனால் கடந்த 2 தினங்களாக சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் சளி தொல்லை காரணமாக அவர் படுத்தப்படியே இருக்கிறார்.

    இன்று காலை கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அனைத்து வித பரிசோதனைகளையும் செய்தனர். பிறகு அவரது இதயம் நன்கு செயல்படுவதாக தெரிவித்தனர். நாடி துடிப்பு நன்றாக இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது.

    மேலும் கருணாநிதிக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் சிகிச்சையை சுமூகமாக நடத்துவதாக கூறப்படுகிறது.

    தற்போது கருணாநிதிக்கு சளி தொல்லை மட்டுமே அதிகமாக உள்ளது. அதை உரிய மருந்துகள் மூலம் ஓரிரு நாட்களில் சரி செய்து விடுவார்கள் என்று தெரிகிறது. அதன் பிறகு கருணாநிதி உடல்நிலையில் முழுமையான முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இன்று காலை 9 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் இருந்து 4 பேர் கொண்ட கூடுதல் மருத்துவ குழு கருணாநிதி வீட்டுக்கு வந்தது. அந்த குழுவில் இருந்த டாக்டர்கள் கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்தனர்.

    கருணாநிதியை பார்ப்பதற்காக மு.க.அழகிரி இன்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் சென்னை வருகிறார். அவர் நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதியை பார்க்கிறார். அவரது உடல் நிலைபற்றி டாக்டர்களிடம் கேட்டு அறிகிறார்.

    கருணாநிதியை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறு காவேரி மருத்துவமனை டாக்டர்கள் இன்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை, “கருணாநிதி விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாக” அறிக்கை வெளியிட்டுள்ளார்.



    தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன் இன்று காலை கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். கருணாநிதியை சந்திக்க தலைவர்கள் வந்த வண்ணம் இருப்பதால் அவரது வீட்டின் முன்பும், வீட்டைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #DMK #Karunanidhi  #KauveryHospital
    ×