search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry theft"

    • ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அற்புதம்மாள் (வயது 88)

    இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தமிழரசன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்வி சேலத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அற்புதம்மாள் கணவர் இறந்த பிறகு நரசிங்கபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அற்புதம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் பேசிவிட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் கதவு திறந்திருந்தது. ஆனால் அற்புதம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. காலையில் பால்காரர் வந்து வீட்டில் பார்த்தபோது அற்புதம்மாள் கொலையுண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பால்காரர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.

    உடனடியாக இது தொடர்பாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அற்புதம்மாள் உடலை பார்வையிட்டனர். அற்புதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை காணவில்லை. மர்மநபர்கள் அவரை கொன்று நகைகயை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது வீட்டை சுற்றிலும் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள், கால் தடங்கள் உள்ளிட்டவைகள் பதிவு செய்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து அற்புதம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அக்கம், பக்கத்தினரிடம் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 7-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ராமசாமி மனைவி அத்தாயம்மாள் ( 65) என்பவரை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்மநபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமசாமிக்கு அப்பகுதியில் பல ஏக்கர் சொத்து உள்ளது. வசதியான கணவன்-மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வருவதை நோட்டமிட்டு அத்தாயம்மாளை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த கொலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரையும் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதேபோல் கடந்த 8-ந்தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (80). சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு இந்த தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்தனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தொடர் கொலைகளை செய்தது ஒரே கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு இந்த கொலைகள் நடைபெறுவதால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள வைரமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜாக்குலின் கிறிஸ்டி (வயது 35). இவர் சம்பவத்தன்று மின் மயானம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஜாக்குலின் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூர்யா (வயது 24), மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் மகன் வைரமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையிலான தனிப்படையினர் உதவியுடன் சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வைரமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கணேசன் (60). லாரி அதிபர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார்.
    • வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சித்தா ளந்தூர் பழைய புளியம்பட்டி குன்னங்கல்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). லாரி அதிபர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தா ருடன் வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு புற காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 11 பவுன் எடை கொண்டது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் -இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பா ற்கடல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 34) என்பது தெரியவந்தது.

    மேலும் கடந்த ஜூன் 12-ந் தேதி குடியாத்தம் அடுத்த மேல் பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது அவரிடம் இருந்து 11 பவுன் எடை கொண்ட 43 தங்கத் தாலிகளை திருடியது தெரிந்தது.

    ேமலும் உள்பட வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பஸ்ஸில் பயணம் செய்த பல்வேறு பயணிகளிடம் நகைகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுடார்.

    இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் திடீரென கவுசல்யாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.
    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவில் குமார் என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை :

    மயிலாப்பூரை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் பணி முடிந்து லிங்கி செட்டி தெருவழியாக நடந்து சென்றார். அப்போது மர்ம வாலிபர் திடீரென கவுசல்யாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கவுசல்யா பணியாற்றும் அதே நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவில் குமார் என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார்.
    • தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் 3 பெண்கள் நகைக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு டாலர் பிடிக்கவில்லை, வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்களை காண்பித்துள்ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். 2 பெண்கள் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்காக ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார். அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மற்ற 2 பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

    3 பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ்சில் அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது 3 பேரும் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடி சென்ற 3 பெண்களை தேடிச் சென்றார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்கடைக்காரர்கள் உஷாராக இருங்கள், எங்களது நகைக்கடையில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது தாராபுரம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். தாராபுரத்தில் பட்டப்பகலில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்ற சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. தொழிலாளி. இவரது மனைவி அண்ணம்மாள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக 21 பவுன் நகை சேமித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர். அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 21 பவுன் நகை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஆனால் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை.

    எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்த சென்ற நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக நாகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் நாகராஜ் நேற்று வழக்கம்போல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்து வந்தார்.

    பின்னர் பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்தபோது, கோவில் பூசாரி சாமி கருவறையில் அலங்கார பணியில் இருந்தபோது, சாமி கும்பிடுவது போல வந்த 35 வயது மர்மநபர் கருவறைக்குள் நைசாக உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் செயினை திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை அருகே பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
    • போலீசில் வசந்தி புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சித்ரா (40). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சித்ரா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் முனியாண்டி கோவில் தெரு 3-வது தெரு போஸ் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வசந்தி (58). இவர் செல்லூர் 50 அடி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து செல்லூர் போலீசில் வசந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பாபிஷேக விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    • கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை திருடி சென்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் இருக்கிறது. இந்த இரு கோவில்களிலும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கும்பாபிஷேக விழா நடந்தது.

    கடந்த 10 நாட்களாக விழா நடந்து வந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 27 பவுன் தங்க நகைகளை திருடர்கள் நைசாக திருடி சென்றுள்ளனர்.

    பரமக்குடி சவுகார் தெருவை சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி கஸ்தூரி(வயது74) என்பவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க செயின் மற்றும் மீனாட்சி நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மனைவி பூங்கொடி அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை மர்மநபர்கள் திருடி உள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து கஸ்தூரி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை திருடி சென்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் எங்கும் சி.டி.சி.டி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அதில் பெண்களிடம் நகைகளை திருடிய திருடர்களின் முகம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழை வாயில் பகுதியில் ஏதாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • வீட்டில் இருக்கும் முதியோர்களிடம், இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்கவோ, வீட்டுக்குள் அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்தரகவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயா (வயது 78). இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    தண்ணீர் எடுக்க விஜயா சென்றபோது, திடீரென அவரது வாயை பொத்திய இருவரும், விஜயாவை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயின், வளையல்கள் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

    இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார், தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழை வாயில் பகுதியில் ஏதாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    முன்னுக்குப்பின் முரணாக அந்த நபர் பதில் அளித்ததை தொடர்ந்து, அவரையும் அவருடன் வந்த பெண்ணையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் திருமலை பட்டுவை சேர்ந்த சுப்பன் மகன் சுபாஷ் என்பதும், அவருடன் வந்த பெண் சுபாஷின் சித்தியான, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி மோனிஷா என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள்தான் விஜயாவிடம் நகை பறித்தது தெரிய வந்தது. இவர்கள் கோவையில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு புத்தரகவுண்டன்பாளையம் வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் பானிபூரி கடை வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி கூறும்போது, மூதாட்டி விஜயா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு, தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வாகன தணிக்கையின்போது இருவரும் சிக்கினர்.

    வீட்டில் இருக்கும் முதியோர்களிடம், இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்கவோ, வீட்டுக்குள் அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    வெளியூர் செல்வதாக இருந்தால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நகைகள் இருந்தால் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    நெல்லையில் கப்பல் ஊழியர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை திருட்டு போனது.
    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள மிஸ்பா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் குரு பிரசாந்த் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் நெல்லைக்கு வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த குரு பிரசாந்த் தனது சகோதரி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.

    நேற்று கே.டி.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டுக்கு குரு பிரசாந்த் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.

     உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,500 உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

     இது தொடர்பாக அவர் பாளை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
    ×