search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு அருகே துணிகரம்லாரி அதிபர் வீட்டில்  24 பவுன் நகை கொள்ளை
    X

    திருச்செங்கோடு அருகே துணிகரம்லாரி அதிபர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை

    • கணேசன் (60). லாரி அதிபர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார்.
    • வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சித்தா ளந்தூர் பழைய புளியம்பட்டி குன்னங்கல்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). லாரி அதிபர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தா ருடன் வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு புற காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×