search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி கொலை"

    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மணிமுத்து மனைவி ராமுத்தாய் (வயது 80). கணவர் இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். பேரன் போத்திராஜ் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.

    அவர் தினசரி ராமுத்தாய்க்கு உணவு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இன்று காலை அவரது வீடு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கி கொன்று விட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் (பொ) சிலை மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்தும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள்தான் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    • விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி நகரில் உள்ள ஜனதா பேட்டையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இவர்களுடன் அவரது சித்தி ரமணம்மா (வயது 85) என்பவரும் உடனிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளருக்கு காவாலியை சேர்ந்த கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மூதாட்டியை கொலை செய்து நகையை பறிக்க மாணவி திட்டம் தீட்டினார். அதன்படி கல்லூரி மாணவி அடிக்கடி யூடியூபில் கிரைம் வீடியோக்களை பார்த்து கொலை செய்வது குறித்து தெரிந்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விரிவுரையாளர் தனது மனைவியுடன் நடை பயிற்சி சென்றார்.

    இதனை கண்காணித்த கல்லூரி மாணவி விரிவுரையாளர் வீட்டிற்குள் சென்றார். தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவர் அணிந்து இருந்த 5½ பவுன் நகையை திருடி சென்றார்.

    இது குறித்து காவாலி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் ரமணம்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாணவியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம் கொட்டக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை (65).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் பேத்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சண்முகம்-நல்லம்மாள் ஆகியோர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி வீட்டிற்குள் குதித்தனர். பின்னர் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிந்த நல்லம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தும், சண்முகத்தை இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கினர்.

    இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அதை பார்த்த மர்மநபர்கள் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல்வேறு பகுதிகளில் பணம், நகை உள்ளதா என தேடி பார்த்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை உறவினர்கள் சிலர் சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சண்முகத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மர்மநபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சியின் போது கொலை சம்பவம் நடந்ததா? அல்லது முன்விரோத தகராறில் யாராவது கொலை செய்ய வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்த சண்முகம் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் தங்களது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது என்றும், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.
    • ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் வேல்நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது70). தனியாக வசித்து வந்த இவர் டெய்லரிங் வேலை செய்து வந்தார்.

    மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் இவரது வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராஜம்மாளின் வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜம்மாள் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.

    ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை கொலை செய்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் பீர்க்கங்கரணை ஏரிக்கரை தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலும் கொள்ளை நடந்தது. கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கருவறையில் இருந்த ஐம்பொன் சிலையை திருடி சென்றார். இதே கோவிலில் 4-வது முறையாக திருட்டு நடந்து உள்ளது.

    இந்த இரு வேறு சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அற்புதம்மாள் (வயது 88)

    இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தமிழரசன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்வி சேலத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அற்புதம்மாள் கணவர் இறந்த பிறகு நரசிங்கபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அற்புதம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் பேசிவிட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் கதவு திறந்திருந்தது. ஆனால் அற்புதம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. காலையில் பால்காரர் வந்து வீட்டில் பார்த்தபோது அற்புதம்மாள் கொலையுண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பால்காரர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.

    உடனடியாக இது தொடர்பாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அற்புதம்மாள் உடலை பார்வையிட்டனர். அற்புதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை காணவில்லை. மர்மநபர்கள் அவரை கொன்று நகைகயை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது வீட்டை சுற்றிலும் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள், கால் தடங்கள் உள்ளிட்டவைகள் பதிவு செய்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து அற்புதம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அக்கம், பக்கத்தினரிடம் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 7-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ராமசாமி மனைவி அத்தாயம்மாள் ( 65) என்பவரை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்மநபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமசாமிக்கு அப்பகுதியில் பல ஏக்கர் சொத்து உள்ளது. வசதியான கணவன்-மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வருவதை நோட்டமிட்டு அத்தாயம்மாளை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த கொலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரையும் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதேபோல் கடந்த 8-ந்தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (80). சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு இந்த தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்தனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தொடர் கொலைகளை செய்தது ஒரே கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு இந்த கொலைகள் நடைபெறுவதால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஏழுபரன் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 65), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (60). இவர்களுக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், மல்லிகா (35) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு சுப்ரமணி வீட்டிற்குள் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அத்தாயம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் மூதாட்டி அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    பின்னர் கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக 2 தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து செங்கையாவை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி வள்ளித்தாய் (வயது 63). இவர்களது மகன் தமிழ்செல்வம்.

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை இறந்துவிட்டார். இதனால் வள்ளித்தாய் மட்டும் கூவாச்சிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வடக்கு தெருவில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வள்ளித்தாய் வீட்டில் மர்மமான இறந்து கிடப்பதாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர் இறப்பதற்கு முன்பாக வரை அக்கம் பக்கத்தினரிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவரது உடலை பார்த்தபோது தலை உள்ளிட்ட சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், வள்ளித்தாய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளியான செங்கையா(வயது 60) என்பவர் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில ஆண்டுகளாக 2 தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவர்களது வீட்டிற்கு இடையே உள்ள காலியிடம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் செங்கையா ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் வள்ளித்தாய் வீட்டுக்கு சென்ற செங்கையா, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றியதில், அங்கு கிடந்த உலக்கையால் வள்ளித்தாயை செங்கையா தாக்கி உள்ளார். இதில் அவர் சரிந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். உடனே ஒன்றும் தெரியாதது போல் செங்கையா தனது வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து செங்கையாவை போலீசார் கைது செய்தனர்.

    • முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தை அருகேயுள்ள வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 66). மூதாட்டியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக உறங்கியுள்ளார். இன்று காலையில் பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதுதொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அதன்படி முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. பதிவான விவரங்களை அடிப்படையாக கொண்டு போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை செய்த போது தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்தான் இந்த கொலையை செய்ததாகவும், மூதாட்டியிடம் இருந்த நகையை திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதையடுத்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அலக்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    நகை மற்றும் பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கொலை செய்த இளைஞரை, சம்பவம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

    • ராஜாமணி திருநகரை சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்திருந்தார்.
    • நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வீசிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை:

    மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை காலாங்கரை பகுதியில் கடந்த 12-ந்தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணம்-நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், அவர் மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரின் மனைவி ராஜாமணி என்பதும், அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது. இதனால் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    ராஜாமணி திருநகரை சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்திருந்தார். அவரிடம் பணம் வாங்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. தனது தாய் மாயமானது குறித்து ராஜாமணி மகன் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    ஆகவே ராஜாமணி கொலையில் வசந்திக்கு தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் நாகமலை புதுக்கோட்டை போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து ராஜாமணியை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ராஜாமணியிடம் வசந்தி ரூ. 1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். மேலும் அவருக்கு ரூ. 5 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்து வந்த அவர், ராஜாமணியை கொலை செய்து, அவர் அணிந்திருக்கும் 28 பவுன் நகையை திருடி விற்க திட்டம் தீட்டினர்.

    இந்நிலையில் பணம் வாங்க வந்த ராஜாமணியை கணவருடன் சேர்ந்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டார். பின்பு மூதாட்டியின் உடலை ஆட்டோவில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் வீசிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து வசந்தி, அவரது கணவர் சத்திய மூர்த்தி, ஆட்டோ டிரைவர் வீரபெருமாள் ஆகிய 3 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வீசிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • உசிலம்பட்டி அருகே மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி. இவரது மனைவி செல்லம்மாள். சாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த செல்லம்மாள் இரவு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது செல்லம்மாள் கழுத்து, முகம் பகுதிகளில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு, இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல், குற்றப்பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். கொலைக்கான கா ணம் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொலை யுண்ட செல்லம்மாளுக்கும், உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த சின்னன் மகன் குணா (வயது45) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் செல்லம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் குணா, அவரது கூட்டாளி மாரிமுத்து (35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    • முத்துச்சாமிக்கு நடக்க முடியாததால் வீட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்திருப்பார்.

    திருப்பூர்:

    திருப்பூா் எஸ்.வி. காலனி பிரதான சாலை டி.எஸ்.ஆா். லே-அவுட் பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (வயது 72), ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியா். இவரது மனைவி சந்திராமணி (67). இந்த தம்பதியின் மகன் பூவேந்தனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் கே.பி.என்.காலனியில் வசித்து வருகிறார்.

    முத்துசாமியும், சந்திராமணியும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சந்திராமணி வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை ஆணையா் வனிதா, உதவி ஆணையா் அனில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

    அப்போது சந்திராமணியின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு 5 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யாரென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    முத்துசாமியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. ஆகவே, முத்துசாமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அந்தநபர்தான் சந்திராமணியை கொலை செய்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம்(60) என்பதும், முத்துச்சாமியின் நண்பர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாழப்பாடி சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூருக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்திராமணியை ஆறுமுகம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    சேலம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முத்துச்சாமிக்கு நடக்க முடியாததால் வீட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்திருப்பார். அப்போது அந்த வழியாக ஆறுமுகம் போகும் போது 2பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 2பேரும் நண்பர்களாகினர்.

    முத்துச்சாமி நடக்க முடியாது என்பதால் அவரது வீட்டிற்கு தேவையான உதவிகளை ஆறுமுகம் செய்து கொடுத்துள்ளார். இதனால் அவர் மீதான நம்பிக்கையில் முத்துச்சாமி தனது வீட்டிலேயே ஆறுமுகத்தை தங்க வைத்துள்ளார். உணவும் வழங்கியுள்ளார். சம்பவத்தன்று இரவும் ஆறுமுகம் முத்துச்சாமி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

    அதிகாலை சந்திராமணி எழுந்து சமையல் செய்த போது அவர் அணிந்திருந்த நகையை ஆறுமுகம் பறிக்க திட்டமிட்டார். இதையடுத்து சந்திராமணி அணிந்திருந்த நகையை பறித்ததுடன், அவரை உயிருடன் விட்டால் தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்பதால் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார். சொந்த ஊர் சேலம் என்பதால் அவர் அங்கு சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். 

    • சொந்த ஊருக்கு வந்த பன்னீர்செல்வம் தனது தாயை பல்வேறு இடங்களில் தேடினார்.
    • பன்னீர் செல்வம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி இந்திராணி (வயது 72). தாண்டவராயன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவரது மகன், மகள்கள் 5 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்திராணி சொந்த ஊரில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி 100 நாள் வேலைக்கு சென்ற இந்திராணி, இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சென்னையில் வசிக்கும் இந்திராணியின் மகன் பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சொந்த ஊருக்கு வந்த பன்னீர்செல்வம் தனது தாயை பல்வேறு இடங்களில் தேடினார். இதையடுத்து பன்னீர் செல்வம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சிவசங்கர் (26) என்பவருக்கு கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் கடனாக இந்திராணி வழங்கியுள்ளார். இந்திராணி பலமுறை கேட்டும் சிவசங்கர் திருப்பி அளிக்கவில்லை.

    இந்நிலையில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த இந்திராணியிடம் வந்த சிவசங்கர் கடனாக கொடுத்த ரூ.30 ஆயிரத்தை எனது வீட்டிற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சிவசங்கர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. வீட்டிற்கு சோதனை நடத்திய போலீசாருக்கு துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு அருகில் சிவசங்கரின் தாயார் கட்டி வரும் வீட்டிற்கு சென்று பார்க்கின்றனர். தரை போடாத நிலையில் ஒரு இடம் மேடாக இருந்தது. அங்கு சென்று பார்த்த போது பள்ளம் தோண்டி புதைத்ததற்கான அறிகுறி போலீசாருக்கு தெரிந்தது. கடனை திருப்பி தருவார் என்று நம்பி வந்த இந்திராணியை கொலை செய்து தனது தாயார் புதியதாக கட்டிவரும் வீட்டிற்குள்ளேயே சிவசங்கர் புதைத்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தி போலீசாருக்கு தெரியவந்தது.

    சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கர தாஸ்-க்கு போலீசார் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் முன்னிலையில் இந்திராணியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது தலையில் பலத்த காயங்களுடன் காது அறுக்கப்பட்ட நிலையில் இந்திராணியில் உடல் இருந்தது. அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியும் காணவில்லை என்று அவரது மகன் போலீசாரிடம் கூறினார். இச்சம்பவம் அறிந்த கிராம மக்கள் சிவசங்கர் வீட்டின் முன்பு குவிந்தனர். இந்திராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய சிவசங்கர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதால், அவரது தாயார் கொளஞ்சி மனைவி குப்புவிடம் (45) விசாரணை நடத்தினர். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாகியுள்ள சிவசங்கரை தேடி வருகின்றனர்.

    ×