search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைக்காக மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது
    X

    நகைக்காக மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது

    • முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தை அருகேயுள்ள வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 66). மூதாட்டியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக உறங்கியுள்ளார். இன்று காலையில் பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதுதொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அதன்படி முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. பதிவான விவரங்களை அடிப்படையாக கொண்டு போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை செய்த போது தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்தான் இந்த கொலையை செய்ததாகவும், மூதாட்டியிடம் இருந்த நகையை திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதையடுத்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அலக்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    நகை மற்றும் பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கொலை செய்த இளைஞரை, சம்பவம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

    Next Story
    ×