என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் கப்பல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
Byமாலை மலர்28 May 2022 10:01 AM GMT (Updated: 28 May 2022 10:01 AM GMT)
நெல்லையில் கப்பல் ஊழியர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை திருட்டு போனது.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள மிஸ்பா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் குரு பிரசாந்த் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் நெல்லைக்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த குரு பிரசாந்த் தனது சகோதரி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
நேற்று கே.டி.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டுக்கு குரு பிரசாந்த் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,500 உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக அவர் பாளை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள மிஸ்பா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் குரு பிரசாந்த் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் நெல்லைக்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த குரு பிரசாந்த் தனது சகோதரி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
நேற்று கே.டி.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டுக்கு குரு பிரசாந்த் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,500 உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக அவர் பாளை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X