search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகை பறித்த வடமாநில வாலிபர் கைது
    X

    பெண்ணிடம் நகை பறித்த வடமாநில வாலிபர் கைது

    • வாலிபர் திடீரென கவுசல்யாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.
    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவில் குமார் என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை :

    மயிலாப்பூரை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் பணி முடிந்து லிங்கி செட்டி தெருவழியாக நடந்து சென்றார். அப்போது மர்ம வாலிபர் திடீரென கவுசல்யாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கவுசல்யா பணியாற்றும் அதே நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவில் குமார் என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×