search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைக்கடையில் தங்க வளையல்களை திருடிச்சென்ற பெண்கள்- சமூகவலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
    X

    நகைக்கடையில் தங்க வளையல்களை திருடிச்சென்ற பெண்கள்- சமூகவலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

    • ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார்.
    • தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் 3 பெண்கள் நகைக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு டாலர் பிடிக்கவில்லை, வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்களை காண்பித்துள்ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். 2 பெண்கள் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்காக ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார். அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மற்ற 2 பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

    3 பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ்சில் அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது 3 பேரும் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடி சென்ற 3 பெண்களை தேடிச் சென்றார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்கடைக்காரர்கள் உஷாராக இருங்கள், எங்களது நகைக்கடையில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது தாராபுரம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். தாராபுரத்தில் பட்டப்பகலில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்ற சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×