search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JDS"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் பா.ஜ.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்வாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • மீதமுள்ள ஒரு இடத்திற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 4 இடங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த வாக்குப்பதிவின்போது ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச கவுடா தங்கள் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி ஓட்டளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால் அதற்கு ஓட்டு போட்டேன் என தெரிவித்தார்.

    அதேபோல், மற்றொரு ம.ஜ.த. எம்எல்ஏ ரேவண்ணா, தான் ஓட்டளித்த ஓட்டுச்சீட்டை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளது.

    மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறி காங்கிரசுக்கு ஓட்டளித்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.  அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக  தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்யலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதையடுத்து  முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் திட்டத்தை முறியடிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    மேலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, பாஜக பக்கம் போக வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இடம் தருவதாகவும் கூறி சமாதானம் செய்துள்ளனர்.



    மேலும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சித்தராமையா கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், பாஜகவின் பகட்டு வார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

    தேவைப்பட்டால் எம்எல்ஏக்களை சொகுசு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
    கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமார்சாமியின் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் முதல் மந்திரி அமர்ந்துள்ள சீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவதாக குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #Kumaraswamy #PMModi #ITRaid
    பெங்களூர்:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

    இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முயாது என்று கூறி இருந்தார். குமாரசாமி இந்த தகவலை பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நேற்று இரவு பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடத்தினார்கள்.

    இதில் அரசியலில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, பொதுவாக வருமானவரி துறை சோதனை மாநில போலீசார் பாதுகாப்புடன் நடக்கும். ஆனால் வருமானவரி துறையினர் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு இன்று அழைத்து சோதனை மேற்கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

    விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர 200-க்கும் மேற்பட்ட கார்கள் தயாராக உள்ளன. ஜே.டி.எஸ். கட்சி, காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடக்கிறது. வருமானவரி துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டால் அதற்காக வருத்தப்படுவார்கள். வருமானவரிதுறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #PMModi #ITRaid
    கர்நாடகாவில் நுண்ணீர் பாசனத்துறை மந்திரி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #JDS #CSPuttaraju
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

    கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பல லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் நுண்ணீர் பாசனத்துறை மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவருமான சிஎஸ் புட்டராஜு வின் வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறையினர் திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர்.



    மேலும் புட்டராஜூவிற்கு பெங்களூரு, மாண்டியா, மற்றும் மைசூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள 17 பொதுப்பணித்துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள், மற்றும் நுண்ணீர் பாசன துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வீடுகளிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #JDS #CSPuttaraju
    கர்நாடக மாநிலத்தில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் கிடைக்காத நிலையில் காங்கிரசிடம் இருந்து 3 வேட்பாளர்களை கடனாக வாங்க உள்ளனர். #LSPolls
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் இக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    அதில் உடுப்பி- சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய 3 தொகுதிகளும் மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசே‌ஷம் என்னவென்றால் இந்த தொகுதிகளில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.

    எனவே அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இருந்தும் தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை.

    எனவே 3 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளர்களை கடன் வாங்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் பிரமோத் மத்வராஜும், பெங்களூரு வடக்கு தொகுதியில் பி.எல். சங்கரும், உத்தரகன்னடா தொகுதியில் பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா போட்டியிட உள்ளனர்.

    அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணு கோபால் மற்றும் கர்நாடக மாநில தலைவர் தினேஷ், குண்டுராவ் ஆகியோருடன் தொடர்ந்து பேசிவருகிறார்.



    இதற்கு காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. எனவே அந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

    எச்.டி.தேவேகவுடாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமோத் ஏற்கனவே ‘பி’ படிவம் பெற்று விட்டார். அவர் இன்னும் ஒரிரு நாளில் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

    மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தான் போட்டியிடுவதை சங்கர் உறுதி செய்துள்ளார். எச்.டி. தேவேகவுடா தும்கூரு தொகுதியில் போட்டியிட்டால் நான் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

    உத்தரகன்னடா தொகுதியில் போட்டியிட வருவாய் துறை மந்திரி ஆர்.வி. தேஷ்பாண்டே மகன் பிரசாந்த் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்கு மந்திரி தேஷ்பாண்டே முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதுகுறித்து என்னிடமோ, மகனிடமோ மத சார்பற்ற ஜனதா தளம் பேசவில்லை என மறுத்துள்ளார்.

    மாற்று கட்சியிடம் இருந்து வேட்பாளரை கடன் வாங்கிய வரலாறு இந்தியாவில் எங்கும் நடைபெற்றதில்லை. தற்போது முதன் முறையாக மத சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளரை கடனாக பெறும் தேர்தல் கூத்து கர்நாடகத்தில் தொடங்கியுள்ளது. #LSPolls
    கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பினராயி விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். #KeralaMinisterResigns #MathewTThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ டி தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

    இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மேத்யூ டீ தாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

    தாமஸ் ராஜினாமா செய்ததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டி, பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும், நாளை மாலை அவர் பதவியேற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், அமைச்சர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #KeralaMinisterResigns #MathewTThomas
    கர்நாடகா மாநிலத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. #KarnatakaBypoll #Congress #JDS #BJP
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

    ராமநகரம் சட்டமன்றம் தொகுதியில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 09 ஆயிரத்து 137 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியாமகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 39 ஆயிரத்து 480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



    இதேபோல், மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை விட ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சிவராமெகவுடா 1 லட்சத்து 96 ஆயிரத்து 883 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், பெல்லாரி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1லட்சத்து 84 ஆயிரத்து 203 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

    நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மட்டும் 36 ஆயிரத்து 467 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ராகவேந்திரா முன்னிலையில் இருக்கிறார்.

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் கட்சி கூட்டணி தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பின்னடைவை அளித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #KarnatakaBypoll #Congress #JDS #BJP
    கர்நாடக மாநில முதல்வராக வேண்டும் என்ற பேராசை இல்லை, ஆனால் அடுத்த தேர்தலில் பார்க்கலாம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #congress
    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 2-வது இடமே பிடித்தது. பா.ஜனதாவிற்கு அதிக தொகுதிகள் கிடைத்த போதிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நீண்ட இழுபறிக்குப்பின் குமாரசாமி ஆட்சியமைத்தார்.

    இந்நிலையில் தனக்கு மீண்டும் முதல்வராகும் பேராசை இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘நான் முதல்வராக போகிறேன் என்ற எடியூரப்பா கூறுவது போல் நான் எங்கேயாவது அப்படி கூறினேனா?. அது போன்ற கேள்விகள் எழும்ப வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்தால், அப்போது பார்க்கலாம்.

    முதலமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு எனக்கு ஐந்து வருடங்கள் கிடைத்தது. நாங்கள் திறமையான அரசை நடத்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வராக வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை’’ என்றார். #Siddaramaiah #congress 
    ஆபரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #bjp

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் உடனடியாக பா.ஜனதா ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த வி‌ஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு அமித் ஷா உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர்களிடம், கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் பா.ஜனதா தாமதம் செய்யாமல் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதாவுக்கு மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படாதவாறு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் படியும், குறிப்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகளால் தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாக இருக்க வேண்டும், ஆப்ரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் என்றும், பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து ஆதரவு தருவதாக இருக்கவேண்டும். இதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


    ஏனெனில் பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் தேவை என்பதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. அமித்ஷாவிடம் இருந்து வந்த உத்தரவால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாகவும், ஆட்சியை பிடிக்க அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க் களின் கூட்டத்தை எடியூரப்பா திடீரென்று கூட்டி இருப்பதாகவும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #AmitShah #bjp

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். #BJP #Congress #JDS

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்கிறார் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

    இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் ஆரூடம் கூறி வருகிறார்கள். இது பாரதிய ஜனதாவினரின் பகல் கனவாகும். பாரதிய ஜனதாவின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது. காங்கிரஸ் கட்சியில் ஜார்கிஹோளி சகோதரர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும், இது குறித்து ஜார்கிஹோளி சகோதர்களிடம் விவரங்களை விசாரித்து அறிவேன்.

    கர்நாடகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து தெரிந்து கொண்டுள்ளேன். ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. ஜார்கிஹோளி சகோதரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். ஜார்கிஹோளி சகோதரர்கள் பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார்கள். எனவே அவர்களால் கட்சிக்கு தொந்தரவு என்று கூறுவதை ஏற்க முடியாது. இதனால் காங்கிரசில் ஏதாவது பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால் ஜார்கிஹோளி சகோதரர்களுடன் கலந்தா லோசிப்பேன். எனவே இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன் என்றார்.


    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமையில்லாததால் ஆட்சி விரைவில் கவிழும் என்றார் முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா.

    இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, முதல்வர் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. இதனால் ஆட்சி விரைவில் கவிழும் நிலையில் உள்ளது.

    இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். எடியூரப்பா மீண்டும் முதல்வராவதற்கான காலம் கனிந்துள்ளது. அவருக்கு மக்களிடம் ஆதரவு உள்ளது. பின்கதவு வழியாக ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் குமாரசாமி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மக்கள் வேதனை அடைந்து, மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் விரும்பும் மாற்றத்தை விரைவில் பாரதிய ஜனதா கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #JDS

    கர்நாடகாவில் பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், தற்போதைய கூட்டணி அரசை கலைப்பதற்காகவும் ஆபரேசன் தாமரை என்ற திட்டத்தை கையில் எடுத்திருப்பதால் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர்.

    இது தவிர இரு கட்சிகளையும் சேர்ந்த சிலர் மந்திரிகளாக உள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடும் இருந்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா பாராளுமன்ற தேர்தலுக்காக ஆபரேசன் தாமரையை மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது முதல் கட்டமாக காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை பாரதிய ஜனதாவுக்கு இழுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 2 மாதங்களில் இருகட்சிகளில் இருந்தும் 5 மூத்த தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். இதே போல் மந்திரி சபையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள இரு கட்சி எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க அவர் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

    காங்கிரசில் உச்சத்தை தொட்டுள்ள கோஷ்டி பூசல் பாரதிய ஜனதாவின் ஆபரேசன் தாமரை ஆகியவற்றால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் தங்களது வீடுகளுக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும், சோதனைக்கும் வருவார்கள் என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் கர்நாடக அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    மத்திய பாரதிய ஜனதா அரசு எதிர் கட்சிகளை ஒடுக்குவதற்கும் சி.பி.ஐ. வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்துகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது இதே யுக்தியை பாரதிய ஜனதா பயன்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலின் போது அதே முறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

    வருமான வரித்துறையை பயன்படுத்தி ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டனி அரசை கலைப்பதற்கு பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது. கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு மறுபடியும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எடியூரப்பாவின் லட்சியமாக இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நோக்கமாகும். அதை எதிர்க்கும் அனைத்து கட்சிகள் மீதும் சி.பி.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கட்டவிழ்த்து விடப்படும் என்பதை நாங்களும் எதிர் பார்த்தோம்.

    எனவே பாரதிய ஜனதாவின் எத்தகைய சூழ்ச்சியையும் நாங்கள் எதிர்கொள்வோம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைவார்கள்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாரதிய ஜனதா குதிரை பேரம் நடத்திய போது அதனை தடுத்தவர் டி.கே.சிவக்குமார்.

    கர்நாடக அரசு என் தலைமையில் கவிழாமல் சிறப்பாக செயல்பட அவர் பக்கபலமாக இருக்கிறார். அவரை பலி வாங்கும் நோக்கத்தோடு பாரதிய ஜனதா செயல்படுகிறது. அவரை கைது செய்யப் போவதாக வதந்தி பரவி வருகிறது. கர்நாடக அரசை பாரதிய ஜனதா கவிழ்த்தால் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட கூடாது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரசில் சமீப காலமாக நிலவும் கருத்து வேறுபாடு அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். மந்திரி சபையில் சுழற்சி முறையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, கவிழ்க்கும் வகையிலோ செயல்படக்கூடாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி கர்நாடகாவில் 28 இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி டி.கே.சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    வருமான வரித்துறை மூலம் பாரதிய ஜனதா மிரட்டி வருவதாக கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே. சிவக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா வருமான வரித்துறை சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறார்கள். காங்கிரசாரின் வீடுகளில் சோதனை நடத்தும் அந்த அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சியினரின் வீடுகளுக்கு போகவே மாட்டார்கள். வருமான வரித்துறை விவகாரத்தை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். பாரதிய ஜனதாவின் இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் கைதாவதாக பரவியுள்ள செய்தி தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×