என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவதா?- பிரதமர் மோடிக்கு குமாரசாமி கண்டனம்
Byமாலை மலர்28 March 2019 7:38 AM GMT (Updated: 28 March 2019 7:38 AM GMT)
தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவதாக குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #Kumaraswamy #PMModi #ITRaid
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முயாது என்று கூறி இருந்தார். குமாரசாமி இந்த தகவலை பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நேற்று இரவு பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடத்தினார்கள்.
இதில் அரசியலில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, பொதுவாக வருமானவரி துறை சோதனை மாநில போலீசார் பாதுகாப்புடன் நடக்கும். ஆனால் வருமானவரி துறையினர் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு இன்று அழைத்து சோதனை மேற்கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர 200-க்கும் மேற்பட்ட கார்கள் தயாராக உள்ளன. ஜே.டி.எஸ். கட்சி, காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடக்கிறது. வருமானவரி துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டால் அதற்காக வருத்தப்படுவார்கள். வருமானவரிதுறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #PMModi #ITRaid
கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முயாது என்று கூறி இருந்தார். குமாரசாமி இந்த தகவலை பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நேற்று இரவு பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடத்தினார்கள்.
இதில் அரசியலில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, பொதுவாக வருமானவரி துறை சோதனை மாநில போலீசார் பாதுகாப்புடன் நடக்கும். ஆனால் வருமானவரி துறையினர் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு இன்று அழைத்து சோதனை மேற்கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர 200-க்கும் மேற்பட்ட கார்கள் தயாராக உள்ளன. ஜே.டி.எஸ். கட்சி, காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடக்கிறது. வருமானவரி துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டால் அதற்காக வருத்தப்படுவார்கள். வருமானவரிதுறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #PMModi #ITRaid
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X