search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka bypoll"

    கர்நாடகா மாநிலத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. #KarnatakaBypoll #Congress #JDS #BJP
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

    ராமநகரம் சட்டமன்றம் தொகுதியில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 09 ஆயிரத்து 137 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியாமகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 39 ஆயிரத்து 480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



    இதேபோல், மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை விட ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சிவராமெகவுடா 1 லட்சத்து 96 ஆயிரத்து 883 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், பெல்லாரி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1லட்சத்து 84 ஆயிரத்து 203 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

    நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மட்டும் 36 ஆயிரத்து 467 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ராகவேந்திரா முன்னிலையில் இருக்கிறார்.

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் கட்சி கூட்டணி தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பின்னடைவை அளித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #KarnatakaBypoll #Congress #JDS #BJP
    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.சி.க்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் அந்த இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடக மாநில முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பா ஷிமோகா எம்.பி.யாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் ஷிகாரிபூரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் ஷிமோகா எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். எடியூரப்பாவை தவிர மொலகல்முறு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பல்லாரி எம்.பி ஸ்ரீராமுலு மற்றும் மெலுகோட் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற மாண்யா எம்.பி சி.எஸ். புட்டராஜூ ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளனர்.

    மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 11 கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர்களில் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்ற கர்நாடக மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, கொரட்கேர் தொகுதியில் வெற்றி பெற்ற மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, பிஜபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பசாசங்கவுடா பாட்டில் யட்னால், ஹெப்பல் தொகுதியில் வெற்றி பெற்ற பைராடி சுரேஷ் மற்றும் கோவிந்த் ராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.சோமன்னா ஆகிய 5 பேரும் தங்களின் கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 3 எம்.பி.களும், 5 எம்.எல்.சி.களும் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll #BSYeddyurappa
    ×