என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக இடைத்தேர்தல்"

    • சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    சென்னபட்டணாவில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், மத்திய மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி யோகேஷ்வர், சிக்காவியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமதுகான் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் துகாராம் எம்.பி.யின் மனைவி அன்னபூர்ணா துகாராம், பா.ஜ.க. சார்பில் பங்காரு ஹனுமந்து ஆகியோர் உள்பட 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    3 தொகுதிகளிலும் சேர்த்து 7 லட்சத்து 4 ஆயிரத்து 673 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 557 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.
    • ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் தற்போதைய நிலவரப்படி, கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    இதில், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.

    ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

    சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார்.

    ×