search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran"

    • அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை
    • ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது

    தெஹ்ரான்:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.

    இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார்.

    அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது. மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    • ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.
    • நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை.

    தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பருவநிலை மாற்றம் காரணமாக பல தசாப்தங்களாக வறட்சியை சந்தித்து வரும் ஈரானின், நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து நகர ஆளுநர் யூசப் கரேகர் கூறியதாவது:-

    கனமழையால் எஸ்தாபன் நகரின் ரௌட்பால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளர். ஆறு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • டிரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • ட்ரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக கூறினார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக சவுதி அரேபியாவைத் தாக்க ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் இதேபோன்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கியதாக சல்லிவன் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து தமது சுற்றுப்பயணத்தின் போது பைடன் ஆலோசிக்க உள்ள நிலையில், ஈரான் குறித்த சல்லிவன் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ==

    • ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சியை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டார்.
    • இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது. இது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதை தடுக்க வகை செய்கிறது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அடுத்து அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் விலகினார். தற்போது அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் சேர்க்க முயற்சித்து வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவந்தது.

    இதற்கிடையே ஈரான் தனது அணுசக்தி தளங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் கண்காணிப்பு கேமராக்களை மூடிவிட்டது. தற்போது ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    தோஹா பேச்சுவார்த்தை முடிவின்றி முடிந்ததற்காக ஈரானும், அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டின. அணு உலைகளில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருவதாகவும், இதற்கான சோதனைகளை ஈரான் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்ததாகவும், உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் டெஹ்ரானில் செயல்பட்டு வரும் இங்கிலாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரி மற்றும் சில வெளிநாட்டினரை ஈரான் புரட்சிப் படையினர் கைது செய்தது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உடனடி சேதம் இல்லை.

    ஈரானின் தெற்கு கிஷ் தீவில் இன்று அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.

    இதில் இரண்டு நிலநடுக்கங்கள் 4.7 ரிக்டர் அளவிலும், தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள தீவில் 5.3 ரிக்டர் அளவிலும் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர்.
    • விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன.

    கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு பயணிகள் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, தபாஸ் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன. மேலும், 12 ஆம்புலன்ஸ்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் மாகாணத்தின் மேலாண்மைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    போர் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா கூறும் அனைத்து தகவல்களும் பொய் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



    ஐக்கிய அரபு எமிரேட்களின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது சில தினங்களுக்கு முன் அதிரடி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என்ற வாக்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குற்றஞ்சாட்டினர்.

    இவரது அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தாக்குதல்களுக்கு ஈரான் தான் முழு காரணம் என்ற வாக்கில் அமெரிக்கா முழுக்க செய்திகள் பரவின. 



    போல்டன் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு தாக்குதல் தொடர்பாக எவ்வித ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  

    இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா இதுபோன்ற நகைச்சுவை மிக்க வதந்திகளை பரப்புவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என ஈரான் வெளியுறவு மந்திரி அபாஸ் மௌசாவி தெரிவித்தார். 

    ஈரானின் அமைதி, கவனமான செயல்பாடுகள் பதற்றத்தை தூண்ட முற்படும் போல்டனின் திட்டத்தை பலிக்க விடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
    ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். அங்கு ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டுக்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு பனிப்போர் மற்றும் வடகொரியா பிரச்சனை தொடர்பாக இன்று பிற்பகல் டிரம்ப் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    ஈரானை அச்சுறுத்தும் வகையில் விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் கூடுதலாக 1500 துருப்பு ராணுவ வீரர்களை அமெரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு கடல்பகுதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ள டிரம்ப், 'ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். அங்கு ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை' என தெரிவித்தார்.



    ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், ’அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அரசு விரும்பினால் நாங்களும் தயார். ஈரான் நாட்டு தலைமையிடம் ஷின்சோ அபே மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பது எனக்கு தெரியும்.

    ஈரானுக்கு மோசமான நிலைமை ஏற்பட யாரும் விரும்பவில்லை. குறிப்பாக, நான் ஈரானை காயப்படுத்த விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
    அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். அசர்பைஜான் மாகாணத்தின் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி மக்களிடம் உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகி இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

    இது அமெரிக்காவுக்கு நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதில் ஆகும். அந்நாட்டின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாது’’ என குறிப்பிட்டார்.
    ஈரான் நாட்டின் கெர்மானஷனா நகரில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    தெக்ரான்:

    ஈரானில் இன்று மதியம் 2.58 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்‌ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

    கெர்மான்ஷா மாகாணம் மலைகள் சூழ்ந்த பகுதி. 2016ம் ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தது நினைவிருக்கலாம். 
    இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், ஈரான் நாட்டை பாதுகாக்கும் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில்,  நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ஹெஷ்மட்டொல்லாஹ் ஃபலாஹட் பிஷே, ‘எங்கள் படைகளை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat 
    ×