search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரானின் தெற்கு கிஷ் தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஈரானின் தெற்கு கிஷ் தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

    • இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உடனடி சேதம் இல்லை.

    ஈரானின் தெற்கு கிஷ் தீவில் இன்று அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.

    இதில் இரண்டு நிலநடுக்கங்கள் 4.7 ரிக்டர் அளவிலும், தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள தீவில் 5.3 ரிக்டர் அளவிலும் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×