search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured"

    • பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.

    இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது.
    • பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பஸ் பின்புறமாக மோதியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உள்பட, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், அனுசுயா (63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8), ஆகியோர் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது. ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பங்களாபடிகையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55).

    இவர் சம்பவத்தன்று, அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பலாப்பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.

    இதனை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் யானை துரத்தி சென்று அவரை தாக்கியது. இதில் கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    வலியால் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது யானை நின்றதால் அச்சமடைந்த மக்கள், யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டதுடன், வனத்துறையினருக்கும் தகவல் ெகாடுத்தனர்.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    திருமங்கலம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). இவர் திருவனந்தபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரதாப் சந்திரன் மற்றும் அவர் நடத்தி வரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன் (45) மற்றும் அழகு நிலைய மேலாளர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரிதா (37) மூன்று பேரும் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    கடைசியில் அந்த கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் பயணம் செய்த மற்ற இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காலை நேரம் என்பதால் கண் அயர்ந்து டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பெற்றோர் கழக சங்கத்தினர் இது தொடர்பாக புகார் மனு அனுப்பி உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மெதுவாக கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு என்று தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 19 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தினமும் கற்றல் திறனை அதிகரிப்பது மற்றும் பல்வேறு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று, வழக்கம் போல வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை அந்த வழியாக சென்ற ஆசிரியை ஒருவர் பார்த்தார்.

    பின்னர் அருகே சென்று 2 பேரிடமும் சமாதானம் பேசியதுடன், 8-ம் வகுப்பு மாணவரை தனது அறைக்கு வந்து சந்திக்குமாறு கூறி விட்டு சென்றார்.

    அதன்படி 8-ம் வகுப்பு மாணவரும் அறைக்கு சென்றார்.

    அங்கு மாணவனை முட்டி போட வைத்து, பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவனின் பெற்றோரிடம் சமாதானம் பேசி, இனிமேல் இதுபோன்று நடக்காது என தெரிவித்தனர். இதனால் மாணவனின் பெற்றோரும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதற்கிடையே ஆசிரியை மாணவனை தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனை அறிந்த பெற்றோர் கழக சங்கத்தினர் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து குழந்தைகள் நல வாரியத்திற்கு இன்று புகார் மனு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் நல வாரியம் விசாரணை நடத்தும் என தெரிகிறது.

    • பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.
    • தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் செங்குடியை அடுத்த செங்கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 34), சாம் டேவிட்சன் (30). இதில் ஜேம்ஸ் மார்ட்டின் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது தம்பியான சாம் டேவிட்சனையும் கப்பலில் வேலைக்கு சேர்க்க விரும்பினார். இதற்கான பயிற்சிக்காக சென்னைக்கு தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார்.

    அவர்களுடன் ஜேம்ஸ் மார்ட்டினின் பெரியப்பா மகன் கமலேஷ் (50) என்பவரும் சென்னை செல்ல தயாரானார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே காரில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த கார் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்துகொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

    காரை ஓட்டி வந்த ஜேம்ஸ்மார்ட்டின் அதனை நிறுத்த முயன்றார். ஆனால் தாறுமாறாக ஓடி அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. ஆனாலும் வேகம் கட்டுக்குள் வராததால் நிற்காமல் சென்ற கார் தடுப்புசுவரையும் தாண்டி எதிர்திசை நோக்கி பாய்ந்தது.

    அப்போது பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் அந்த லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் வந்த மூன்று பேர் மற்றும் கண்டெய்டனர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுரை விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே தாறுமாறாக எதிர்திசையில் பாய்ந்த காரை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சினிமா படப்பிடிப்பில் நடப்பது போன்ற பிரமிப்பை இந்த விபத்து ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காருக்குள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்
    • இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம்.

    அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும் பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்பது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய ஒருவன் திடீரென அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    "கிங் டோனட் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது" என இச்சம்பவம் குறித்து சியாட்டில் நகர காவல்துறை தலைவர் அட்ரியன் டயஸ் கூறியிருக்கிறார்.

    இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

    "பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார்.

    சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.

    • கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
    • விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது மகன்களான அபிநவ் (வயது 9), ஆதவ் (7) ஆகியோருக்கு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மொட்டை அடிப்பதற்காக காரில் உறவினர்களுடன் புறப்பட்டார்.

    கோவிலுக்கு சென்று மொட்டை அடித்த பின்னர் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை சவுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் காரில் பயணம் செய்த அபிநவ், ஆதவ், மித்ரன் (5), தீரன் (2), டிரைவர் சவுந்தர் (25), பொன்ெமாழி (28), சண்முக பிரியா (28), லட்சுமி (50), இந்துராணி (30) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்
    • சாலை விரிவாக்க பணியால் விபரீதம்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி- சக்தி ரோட்டில் கடந்த சில நாட்களாக 4 வழி சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. அதே பகுதியில் பாலம் கட்டி சாலையை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் கோபி செட்டிபாளையம் வந்தார். பின்னர் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது கோபி-சக்தி ரோடு சிங்கிரிபாளையம் பகுதியில் தினேஷ் குமார் வந்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வந்துள்ளது. இருள் சூழ்ந்து இருந்ததால் இதை கவனிக்காத தினேஷ்குமார் காரை இயக்கி உள்ளார். அப்போது கார் பாலம் கட்டும் தடுப்பை இடித்து அருகில் உள்ள குழியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தினேஷ்குமார் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சை க்காக கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றனர்.

    • அரசுப்பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
    • பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    அவிநாசி:

    திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கருவலூா் காளிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பொக்லைன் வாகனம், அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

    • சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.
    • உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55) தொழிலாளி. இருவரும் வேலையை முடித்துவிட்டு விளாத்திகுளத்தில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

    இதேபோன்று கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் மதன்குமார் (21). வேம்பார் அருகே உள்ள கன்னிராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சுடலைமணி (20). இவர்கள் இருவரும் வேம்பாாில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வேம்பாாில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் விளாத்திகுளம்- வேம்பார் சாலையில் செவ்வலூரணி அருகே வரும்பொழுது சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் சண்முகராஜ் மற்றும் சுடலைமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சண்முகம் மற்றும் மதன்குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் சென்று படுகாயமடைந்த சண்முகம், மதன்குமார் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மதன்குமார், சண்முகம் ஆகிய இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

    • நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி படுகாயமடைந்தார்
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மகன் செல்வராஜ் (வயது 48). இவர் விளாங்குடி-ஒரத்தூர் சாலையில் உள்ள நெல் குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் ஒரு லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றி விட்டு அடுத்த லாரியில் நெல் மூட்டையை ஏற்றுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரியில் சரியாக அடுக்கப்படாமல் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து செல்வராஜ் மீது விழுந்தது. இதில் செல்வராஜ் படுகாயமடைந்தார். பின்னர் இவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இது குறித்து செல்வராஜ் கயர்லாபாத் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×