அவிநாசி அருகே அரசு பஸ் மீது பொக்லைன் வாகனம் மோதி 13 போ் காயம்

அரசுப்பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அவிநாசி அருகே அரசு பஸ் மீது பொக்லைன் வாகனம் மோதி  13 போ் காயம்
Published on

அவிநாசி:

திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கருவலூா் காளிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பொக்லைன் வாகனம், அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com