என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seattle"

    • வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் டேவ், துறையிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    • 20 மில்லியன் டாலர் தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும்

    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு 29 மில்லியன் டாலர் (ரூ.260 கோடி) இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜான்வி கண்டுலா, சியாட்டில் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இச்சூழலில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி அவர் உயிரிழந்தார்.

    ஒரு இடத்தில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாக புகார் வந்ததாகவும், அதற்காக அதிகாரிகள்  சென்றுகொண்டிருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 40 கி.மீ வேகம் செல்ல வேண்டிய இடத்தில் சுமார் 119 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் அவசரக்கால எச்சரிக்கை விளக்குகள் (Emergency lights) ஒளிரவிடப்பட்டிருந்தாலும், எச்சரிக்கை ஒலி சந்திப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே ஜான்வியின் மரணம் குறித்து மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆட்ரர் கேலியாகப் பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் நீதி கேட்டு இந்திய அரசும் முறையிட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறை தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஆடெரர், பணியில் இருந்து நீக்கப்பட்டார். கந்துலாவை மோதிய வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் டேவ், துறையிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும்  கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கெவின் டேவுக்கு $5,000 (ரூ.4.50 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. 

    இந்நிலையில் ஜான்வியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், தற்போது இந்த மிகப்பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதில் சுமார் 20 மில்லியன் டாலர் தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

    • இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்
    • இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம்.

    அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும் பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்பது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய ஒருவன் திடீரென அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    "கிங் டோனட் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது" என இச்சம்பவம் குறித்து சியாட்டில் நகர காவல்துறை தலைவர் அட்ரியன் டயஸ் கூறியிருக்கிறார்.

    இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

    "பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார்.

    சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.

    • மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
    • புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் காக்பிட்-இல் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஹானோலுலு நோக்கி புறப்பட்ட விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.

    திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் பத்து பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 புறப்பட்டது. சியாட்டிலில் இருந்து ஹானோலுலு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    இதையடுத்து விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதையடுத்து, விமானம் சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பே விமான நிலையத்தில் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், தீயனைப்புத் துறையினர் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதனை விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். 

    ×