என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவாய்"

    • கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
    • 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிளாவியா எரிமலை கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வளியேற்றி வருகிறது.

    கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. கிட்டத்தட்ட 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

    • ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
    • ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

    ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது. இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளார். அவரது பதிவில், "பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கும் சுனாமி பாதிப்பு உள்ளது. ஆகவே உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
    • புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் காக்பிட்-இல் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஹானோலுலு நோக்கி புறப்பட்ட விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.

    திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் பத்து பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 புறப்பட்டது. சியாட்டிலில் இருந்து ஹானோலுலு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    இதையடுத்து விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதையடுத்து, விமானம் சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பே விமான நிலையத்தில் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், தீயனைப்புத் துறையினர் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதனை விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். 

    சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற ஹவாய் தீவை லேன் சூறாவளி தாக்கியதால் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #HurricaneLane #Hawaii
    ஹனோலுலு:

    சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற தீவான ஹவாயில் நேற்று லேன் என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது, அலோஹா பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த சூறாவளி வீட்டு கூறைகளை பறக்கவிட்டுள்ளது.

    கனமழையால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது, அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஹவாய் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    ×