என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கார் மரத்தில் மோதி விபத்து - 9 பேர் படுகாயம்
- கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
- விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது மகன்களான அபிநவ் (வயது 9), ஆதவ் (7) ஆகியோருக்கு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மொட்டை அடிப்பதற்காக காரில் உறவினர்களுடன் புறப்பட்டார்.
கோவிலுக்கு சென்று மொட்டை அடித்த பின்னர் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை சவுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த அபிநவ், ஆதவ், மித்ரன் (5), தீரன் (2), டிரைவர் சவுந்தர் (25), பொன்ெமாழி (28), சண்முக பிரியா (28), லட்சுமி (50), இந்துராணி (30) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






