search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indvseng"

    • கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.
    • ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதத்துடன் இந்த தொடரில் 655 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    தர்மசாலா:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (7-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அதிரடி இந்த டெஸ்டிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் தடுமாற்றத்துடன் வெற்றி கிடைத்தது . சுப்மன் கில்-ஜூரல் ஜோடி தோல்வியில் இருந்து மீட்டு அணியை வெற்றி பெற வைத்தது. காயம் காரணமாக கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. அவர் முதல் டெஸ்டில் மட்டுமே விளையாடினார். கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு இரட்டை சதத்துடன் இந்த தொடரில் 655 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சுப்மன் கில் (342 ரன்), ரோகித் சர்மா (297) ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். புதுமுக வீரர் துருவ் ஜுரல் கடந்த 2 டெஸ்டிலும் (175) தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    பும்ரா, அஸ்வின் (17விக்கெட்) குல்தீப் யாதவ் (12), முகமது சிராஜ் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார். அவர் 6 இன்னிங்சில் ஒரு சதத்துடன் 217 ரன் எடுத்துள்ளார். 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்து கூட்டணியே அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

    ஆகாஷ் தீப் இடத்தில் பும்ரா இடம் பெறுவார். மோசமாக விளையாடி வரும் ரஜத் படிதார் நீக்கப்பட்டால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலாவது வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கிராவ்லி ( 328 ரன்) , டக்கெட் ( 314), ஆலி போப் ( 285), ஜோ ரூட் ( 210), ஹார்ட்லே ( 20 விக்கெட்), ரேகான் அகமது (11), ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணியும் நாளை மோதுவது 136-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 135 போட்டியில் இந்தியா 34-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
    • இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தர்மசாலா:

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

    இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
    • முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும். 

    இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர். 

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
    • இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்க உள்ளது.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து (2021) கடந்து முறை விளையாடியதை விட இந்த முறை சிறப்பாக விளையாடி உள்ளது. பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருந்தார். அவர் விளையாடியதை பென் டக்கெட் பார்த்ததில்லை போல.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது.
    • இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன்.

    மும்பை:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

    முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களால் விலகியதை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று மைக்கேல் ஆதர்டன் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் 2020/21 பார்டர் - கவாஸ்கர் தொடரில் 36 ரன்களில் ஆல் அவுட்டாகி தவித்தபோது விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது. குறிப்பாக 36-ரன்களில் ஆல் அவுட்டான பின் மெல்போர்னில் வென்ற இந்தியா சிட்னியில் போராடி தோல்வியை தவிர்த்தது.

    ஒருவேளை அந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் நின்று விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால் அந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் காட்டிய தைரியம், சகிப்புத்தன்மை, துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இந்த இங்கிலாந்து தொடரிலும் தெரிந்தன.

    அதனால்தான் இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன். எனவே இங்கு நான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் பெரிய வீரர்களுக்கு நீங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கள் வெல்வோம் என்பதை இந்த 2 தொடர்களும் காட்டியுள்ளன. இதற்கான பாராட்டுகள் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும்.

    இந்த தொடர் நம்மிடம் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும் உறுதியான மனம் கொண்ட வீரர்கள் இருந்தால் வெல்ல முடியும் என்பதை காண்பித்துள்ளது.

    என்று கவாஸ்கர் கூறினார்.

    • இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது.
    • ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரஜத் பட்டிதார் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத தொடரைக் கொண்டுள்ளார். ஆனால் இது போன்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே இந்த இந்திய அணியின் நல்ல அம்சம் மற்றும் கலாச்சாரமாகும். ஏனெனில் இத்தொடரில் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன.

    ஒருவேளை ரஜத் பட்டிதாரின் அணுகுமுறை மற்றும் உடைமாற்றும் அறையில் அவருடைய கேரக்டர் பிடிக்கும் அளவுக்கு இருந்தால் ரோகித் மற்றும் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள்.

    அதனால் இந்த தொடரில் ரன்கள் அடிக்காவிட்டாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள். இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது. அது இளம் வீரர்களும் மோசமான தருணத்தை சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ள இந்திய அணியின் கலாச்சாரத்தை எனக்கு காண்பிக்கிறது.

    இவ்வாறு ஏபிடி கூறினார்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியுள்ளார். 4-வது டெஸ்ட்டில் விளையாடத பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2-ம் தேதி தொடங்கும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக அவர் தமிழ்நாடு அணியில் இணைவார். தேவைப்பட்டால் ஐந்தாவது டெஸ்டுக்கான உள்நாட்டுப் போட்டி முடிந்த பிறகு அவர் இந்திய அணியில் இணைவார்.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

    ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், தேவ்தத் படிக்கல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
    • இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்டில் வென்று அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்தியாவிடம் தோற்றதில் இங்கிலாந்து அணிக்கு அவமானம் இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்த தொடர் முழுவதும் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெற்ற விதத்துக்கு இந்திய அணியை பாராட்டுகிறேன். அதற்கு தகுதியான அணியாகும். விராட்கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், பும்ரா (ஒரு போட்டியில் ஆட வில்லை) ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த தொடரில் பெரும்பாலும் இல்லை. அந்த வகையில் முக்கிய வீரர்கள் இல்லாத பெரிய பட்டியலை கொண்டு இருந்தாலும் இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

    திறமை மட்டுமில்லாமல் மனதளவில் வலிமை இருப்பதால் சொந்த மண்ணில் மற்றொரு தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். சொந்த மண்ணில் அவர்களுடைய வெற்றி விகிதம் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை. இந்த தொடரில் இங்கிலாந்து அணி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

    அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். 2-வது இன்னிங்சில் அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித்சர்மா அவரிடம் புதிய பந்தை கொடுத்தபோது கண்களில் நெருப்பு தெரிந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்து விட்டார்.

    துருவ் ஜூரல்-குல்தீப் யாதவ் ஜோடி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் திருப்பு முனையாகும். சுப்மன்கில் தனது திறமையான ஆட்டத்தை அமைதியாக வெளிப்படுத்தினார். ஜூரல் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் நன்றாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    • முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.
    • முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய மண்ணில் 200 ரன்னுக்கு குறைவாக இலக்கை நோக்கி ஆடிய டெஸ்டுகளில் இந்தியா ஒரு போதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடருகிறது. இத்தகைய இலக்கை எதிர்கொண்ட 33 டெஸ்டுகளில் 30-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 தொடருக்கு மேல் (ஆஸ்திரேலியா 10 முறை) வென்றதில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்த இந்தியா அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டுகாலக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

    முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.

    முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலின் வயது 23 ஆண்டு 33 நாட்கள். டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை பெற்ற 5-வது இளம் வீரர், இந்திய அளவில் 2-வது இளம் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    இந்த தொடரில் இரண்டு இரட்டை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 971 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 8 டெஸ்டுகளில் ஆடிய வீரர்களில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த வகையில் கவாஸ்கர் 938 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் சாதனையை ரோகித்சர்மா முறியடித்தார்.

    ராஞ்சி:

    இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    192 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட் டது. 6-வது விக்கெட்டுக்கு சுப்மன்கில் (52 ரன்)-ஜூரல் (39 ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை தேடி தந்தது.

    இந்த வெற்றி மூலம் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணிக்கு டெஸ்டில் கிடைத்த 9-வது வெற்றியாகும். 4 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60.00 ஆகும்.

    இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை ரோகித்சர்மா முந்தினார். டிராவிட் தலைமையில் 25 டெஸ்டில் 8-ல் வெற்றி கிடைத்தது. 6 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 11 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    மேலும் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரை ரோகித்சர்மா சமன் செய்தார். இருவரது தலைமையிலும் 9 டெஸ்டில் வெற்றி கிடைத்து இருந்தது.

    விராட்கோலி 40 வெற்றியுடன் (68 டெஸ்ட்) முதல் இடத்திலும், டோனி 27 வெற்றியுடன் (60 டெஸ்ட்) 2-வது இடத்திலும், கங்குலி 21 வெற்றியுடன் (49 டெஸ்ட்) 3-வது இடத்திலும், அசாருதீன் 14 வெற்றியுடன் (47 டெஸ்ட்) 4-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ரோகித் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ரோகித் பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அவர் டோனி, அசாருதீன், அஜீத் வடேகர் ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 10 வெற்றியுடன் (18 டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.
    • இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.

    ராஞ்சி

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

    இதில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.

    இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.

    எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். துருவ் ஜுரேல் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது.

    அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×