search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் அப்டேட்ஸ்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் அப்டேட்ஸ்

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியுள்ளார். 4-வது டெஸ்ட்டில் விளையாடத பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2-ம் தேதி தொடங்கும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக அவர் தமிழ்நாடு அணியில் இணைவார். தேவைப்பட்டால் ஐந்தாவது டெஸ்டுக்கான உள்நாட்டுப் போட்டி முடிந்த பிறகு அவர் இந்திய அணியில் இணைவார்.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

    ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், தேவ்தத் படிக்கல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

    Next Story
    ×