search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து
    X

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

    • இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
    • இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தர்மசாலா:

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

    இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.

    Next Story
    ×