என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "husband suicide"
குன்னத்தூர்:
குன்னத்தூர் அருகே கருக்குபாளையம் நெசவாளர் காலணியைச் சேர்ந்தவர் வடிவேல் இவருக்கு பெரியசாமி (வயது 27) பிரபு (வயது 26) இரண்டு மகன்கள் உள்ளனர்.
வடிவேல் மற்றும் பெரியசாமி குடும்பத்தினர் கேரளாவில் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்கள். பிரபு கருக்குபாளையம் நெசவாளர் காலணியில் இருந்து கொண்டு பால் வியாபாரம் செய்து வருகிறார்.
பிரபுவிற்கு கவுதமி என்ற மனைவியும் 6 வயது 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். கவுதமி பனியன் கம்பெனி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் பிரபுவின் அண்ணன் மனைவிக்கும் கவுதமிக்கும் தகராறு ஏற்பட்டதில் கவுதமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது அம்மா வீடான ஈரோடு மாவட்டம் நம்பியூருக்கு சென்று விட்டார் மேலும் தனது கணவர் பிரபுவை மாமியார் வீட்டிற்கு வந்து விடும் படி கூறி வந்துள்ளார்.
இதில் மனவேதனை அடைந்த பிரபு நேற்று முந்தினம் இரவு விஷ மாத்திரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து, பிரபுவின் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
ஒரத்தநாடு:
நாகையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). கார் டிரைவர். இவரது மனைவி துர்கா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாசிடம் கோபித்து கொண்டு துர்கா தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெற்கு மடவளாகத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பிரகாஷ் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே துர்க்காவை சமாதானபடுத்தி வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தார்.
அதன்படி ஒரத்தநாட்டுக்கு சென்று அவர் இனி நமக்குள் எந்த வித சண்டையும் வராது. நம் வீட்டுக்கு செல்லலாம். என் கூட வா என்று துர்காவை அழைத்தார். ஆனால் அவர் மறுத்தார். இதனால் மனமுடைந்த பிரகாஷ் அங்கேயே மனைவி கண்முன்னே திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மாமனார் உடனடியாக பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. சுரேசும் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர்:
புளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்தவர் துக்காராம் (வயது 42). செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தாராபாய் (32). இவர் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
மனைவி தாராபாய் நடத்தையில் துக்காராம் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
நேற்று இரவு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நள்ளிரவில் துக்காராம் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போதும் மனைவியின் மீது அவருக்கு ஆத்திரம் தீர வில்லை. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
திடீரென்று அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் துக்காராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை அனிதாநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரத்தீஸ் யுமணன் (18) என்ற மகனும், தேவகி (13) என்ற மகளும் உள்ளனர்.
கனகராஜ் முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் பூக்கடை நடத்தி வருகிறார். மகேஸ்வரி திப்புராயப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று புத்தாண்டையொட்டி மகேஸ்வரி கணவரிடம் மாலை கோவிலுக்கு செல்ல வேண்டும். அதனால் கடையை சீக்கிரம் பூட்டி விடுங்கள் என கூறினார். இதையடுத்து மகேஸ்வரியும், தனது குழந்தைகளும் கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் இரவு 8 மணிக்கு கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.
இதை கண்ட மகேஸ்வரி புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல இருக்கும் நேரத்தில் இன்றும் மது குடித்து வந்துள்ளீர்களே? என கணவனை திட்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த அவர் மேல் மாடிக்கு சென்று படுத்து கொண்டார்.
பின்னர் மகேஸ்வரி குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார்.
மனைவி திட்டியதால் சோகத்தில் இருந்த கனகராஜ் அங்கு மின் விசிறி கொக்கியில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மனைவி- குழந்தைகள் மேல் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டது. தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் தேவலாபுரம் அடுத்த எல்மாங்குப்பத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது42) எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷாராணி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தயாளன் மேல் கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.
தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த உஷாராணி கே.ஜி.எப்.பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் தயாளன் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் ராமமூர்த்தி சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்ட பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தயாளன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் தயாளன் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
மடுகரை இந்திராநகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவர் நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி வாசுகியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அவர் சிகிச்சை முடியும் முன்பே வீடு திரும்பினார். அப்போது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை வாசுகி கண்டித்தார்.
இதனால் மனவேதனை அடைந்த மதியழகன் சோகத்துடன் டெய்லர் கடைக்கு சென்றார். இதனால் சந்தேகமடைந்த வாசுகி, கணவர் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து டெய்லர் கடைக்கு சென்று பார்த்தார்.
அப்போது கடையில் மதியழகன் தனது வேட்டியால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் நெட்டப்பாக்கம் லட்சுமி நகர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 38). லாரி டிரைவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மகேஸ்வரி கூலி வேலை செய்து வந்தார்.
ராஜாமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி மகேஸ்வரி கண்டித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டில் தனியாக இருந்த ராஜாமணி அங்கிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்தனர்.
பின்னர் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி இறந்து போனார்.
மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகிமை தாஸ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யாமேரி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சத்யாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகிமைதாஸ் கவலையடைந்தார். வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு போய்விட்டாரே என நினைத்து மனம் உடைந்து காணப்பட்டார்.
நேற்று மாலை மகிமை தாஸ் திடீரென வீட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மகிமைதாஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ் பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பூந்தமல்லி கண்டோன்மென்ட் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(25) தொழிலாளி.
இவருடைய மனைவி துர்கா(23). இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுப்ரியா(2),சிவன்யா(1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வெங்கடேசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு வெங்கடேசன் தனது 2 குழந்தைகளையும் அருகில் உள்ள துர்காவின் பாட்டி மீராபாய் வீட்டில் விட்டு விட்டு வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தைகள் அழுதன.
துர்காவின் பாட்டி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டிக் கிடந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.
பிணமாக கிடந்த துர்காவின் உடலில் காயங்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே துர்கா கொலை பற்றிய விவரம் தெரிய வரும்.
அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தைச் சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40). இவரது மனைவி ஜெகதீஷ் ஷைனி (33), இவர் குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரின் சகோதரி ஆவார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெகதீஷ் ஷைனி பால்குளத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்துவந்தார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த டால்டன் செல்வ எட்வர்ட், அவரது மனைவி ஜெகதீஷ் ஷைனியை சரமாரியாக வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெகதீஷ் ஷைனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நினைவு திரும்பாமலேயே இருந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான ஜெகதீஷ் ஷைனியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.
ஏற்கனவே மனைவி ஜெகதீஷ் ஷைனியை வெட்டி விட்டு தப்பியோடிய கணவர் டால்டன் செல்வ எட்வர்ட் கர்நாடகா மாநிலத்தில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவன்-மனைவி இருவரும் பலியானதையடுத்து அவர்களது குழந்தைகள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்