search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife separated"

    பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த காணப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டீக்கடை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது30). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேட்டு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் தேவலாபுரம் அடுத்த எல்மாங்குப்பத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது42) எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷாராணி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தயாளன் மேல் கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த உஷாராணி கே.ஜி.எப்.பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் தயாளன் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் ராமமூர்த்தி சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்ட பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தயாளன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் தயாளன் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பி.எஸ்.என்.எல். அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் ஏற்காடு பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மகளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நிர்மலா தனது மகனை அழைத்து கொண்டு மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ரவி கன்னங்குறிச்சியில் தனியாக வசித்து வந்தார்.

    இதில் மனம் உடைந்த ரவி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×