என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்17 May 2019 5:47 PM GMT (Updated: 17 May 2019 5:47 PM GMT)
பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த காணப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டீக்கடை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது30). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேட்டு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X