search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HONOR"

    • ஹானர் பிராண்டின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஹானர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    ஹானர் மேஜிக் Vs அம்சங்கள்:

    7.9 இன்ச் 2272x1984 பிக்சல் FHD+ OLED 10.3:9 டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    6.45 இன்ச் 2560x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

    12 ஜிபி ரேம்

    512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் யுஐ 7.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி 3.1 டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை விவரங்கள்:

    ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.  

    • மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    மதுரை

    இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
    • அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.

    இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.

    இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.

    இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.

    அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.

    அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.

    தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.

    • ஹானர் நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது.
    • ஜூலை மாத வாக்கில் இதே டேப்லெட் மாடல் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஹானர் பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இது ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஆகும். இதில் 12 இன்ச் 2K எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5MP பிரைமரி மற்றும் செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    6.9 மில்லிமீட்டர் அளவில் மெட்டல் பாடி கொண்டிருக்கும் ஹானர் பேட் 8 மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர்கள், ஹானர் உருவாக்கிய ஹிஸ்டன் ஆடியோ டியுனிங், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 7250 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ஹானர் பேட் 8 அம்சங்கள்:

    12 இன்ச் 2000x1200 பிக்சல் 2K டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    4 ஜிபி / 6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1

    5MP பிரைமரி கேமரா

    5MP செல்பி கேமரா

    8 ஸ்பீக்கர்கள், ஹானர் ஹிஸ்டன் சவுண்ட், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா

    வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்

    யுஎஸ்பி டைப் சி

    7250 எம்ஏஹெச் பேட்டரி

    22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹானர் பேட் 8 மாடல் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.

    • கடந்த 2021- 22-ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளி பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 6 ஆசிரியர்கள் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டனர்.

    தமிழக அளவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தில் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 2021 - 2022ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து நடைபெற்ற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில், மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம், ஆலாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ராசகணேசன், நீடாமங்கலம் ஒன்றியம், புள்ளவராயன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள், காளாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆனந்த், கற்பகநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருளானந்தம் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சக்கரபாணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    இதில் டாக்டர் ராதாகிரு ஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம் ஆலாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் முதன்மைக் கல்விஅலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மணிவ ண்ணன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவினரிடம் தான் பெற்ற விருது தொகையான ரூ.10 ஆயிரத்தை பள்ளி வளர்ச்சி நிதிக்காக ஒப்படைத்தார்.

    ஏற்பாட்டினை தலைமை ஆசிரியை வசந்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கபாபு ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை, கைவினை பொருட்கள் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
    • உயரிய விருதான நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவ ட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆர்.ஜி.கலைமதி.

    இவர் கடந்த 32 ஆண்டு களாக ஆசிரியையாக சேவையாற்றி வருவதோடு, 20 ஆண்டுகளாக பாரத சாரண, சாரணியர் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த பயிற்சியில் தமிழகத்தின் பிரதிநிதியாகக் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மேலும், இவர் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் மாவட்ட சாரணிய பயிற்சி ஆணை யராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

    மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பல மாணவிகள் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி விருதுபெற உறுதுணையாக இருந்துள்ளார்.

    இவர் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்க லை, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

    இவரின் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறையின் உயரிய விருதான நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

    விருது பெற்ற ஆசிரியை கலைமதிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இக்பால், துணைத் தலைவர் ராமதாஸ், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
    • மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர்.

    மன்னார்குடி:

    சென்னையில் இந்தியன் புக் ஆப் வேல் ரெக்கார்ட் அமைப்பினர் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்திய சிலம்பு சுற்றும் சாதனை நிகழ்ச்சியில் மன்னார்குடி அருகே கோட்டூர் 8-ம் வகுப்பு மாணவன் சஸ்வின், கம்பங்குடி மாணவன் ஆர்ச் சுரேன்செல்வா ஆகிய இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

    இதையடுத்து கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தற்காப்பு பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன், லயன் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், பாலா, சார்ஜ், மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஹானர் பிராண்டின் புது இயர்பட்ஸ் மாடல் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஹூவாய் நிறுவனத்தில் இருந்து பிரிந்தது முதல் இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு நிலையற்று காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கில் ஹானர் பிராண்டு புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது இயர்பட்ஸ் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X என அழைக்கப்பட இருக்கிறது. வெளியீடு மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் அம்சங்கள் பற்றிய விவரங்களும் டீசரில் இடம்பெற்று உள்ளது.

    அந்த வகையில் புது ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடலில், 12 எம்எம் டிரைவர்கள், அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பிளேபேக் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தை தவிர ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடல் சர்வதேச சந்தையில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இது ஹானர் பிராண்டின் எண்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும்.


    இதில் 12 எம்எம் பயோ-டயபிராம் டைனமிக் டிரைவர்கள், குறைந்த எடை செம்பு முலாம் பூசப்பட்ட அலுமினியம் அர்மேச்சர் கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, ஏஏசி மற்றும் எஸ்பிசி கோடெக் மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 13 டிகிரி வளைந்த டிசைன் மற்றும் நேச்சுரல் பிட் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட் ஒன்றின் இடை 4.3 கிராம் ஆகும்.

    இந்த இயர்போனில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் டூயல்-மைக் நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதி, அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பேட்டரி லைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடலில் உள்ள கேமிங் மோட் 125 மில்லி செகண்ட் வரையிலான லோ லேடன்சி வழங்குகிறது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    • மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.
    • தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ேதாம், இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மக்களின் உயிரினை காத்து சமூகங்களுக்கு ஆற்றி வரும் மருத்துவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாகவும் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்அருள்தாஸ் தலைமையில் இந்நிகழ்ச்சி யானது நடத்த ப்பட்டது.

    இதில் மருத்துவர்கள் வி.தனபாலன், ரவீந்திரன், சாந்தி பவுல்ராஜ், ஏ.அஜந்தன், வி.மாரிமுத்து, இனியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களான கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களுக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் பொன்னாடை அணிவித்து மருத்துவ மேதை டாக்டர் பிதான் சந்திரராய் நினைவாக விருதுகள் வழங்கி, மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் தங்களின் அனுபவ த்தையும், பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டதோடு தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ததாகவும் இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை எனவும், அவ்வாறு பெருமைப்படுத்திய தஞ்சை தலைமை அஞ்சலகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.மேலும் இனிவரும் கொரோனா காலங்களில் எவ்வாறு நாம் இருக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியின் முன்னதாக மனமகிழ் மன்ற செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார்.தஞ்சை தலைமை அஞ்சலகத்தின் அலுவலர்கள் எஸ்.சித்ரா, வி.தேவிசௌதா ஆகியோர் மருத்துவர்களின் சிறப்புகள் குறித்து பேசினர். இதில் சிறுசேமிப்பு முகவர்கள் நீலகண்டன்,குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்ச லகத்தின் துணை அஞ்சலக தலைவர் எம்.குழந்தைராஜ் நன்றி கூறினார்.

    • ஹானர் வாட்ச் GS 3 மாடலின் விற்பனை அமேசான் தளத்தில் இன்று முதல் (ஜூன் 7) துவங்கி இருக்கிறது.
    • முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த ஹானர் வாட்ச் GS 3 உள்ளது.

    ஹானர் நிறுவனத்தின் GS 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. புதிய ஹானர் வாட்ச் GS 3 மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன குறிப்பாக இதன் டிஸ்பிளேவை பொருத்தவரை 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் 3D வளைந்த கிளாஸ் உடன் இருக்கும். அதேபோல் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோடுகள், 10-க்கும் அதிகமான ப்ரோபஷனல் ஸ்போர்ட்ஸ் மோடுகள், 85 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. அத்துடன் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் இதில் உள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் புதிதாக 8 சேனல் PPG சென்சார் மாட்யுல் உள்ளது. இதுதவிர AI ஹார்ட் ரேட் சென்சார் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பயனர்களின் ஸ்லீப், ஸ்டிரெஸ் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் சென்சார்களும் இதில் இடம்பெற்று உள்ளன. மேலும் இதில் ப்ளூடூத் காலிங் அம்சமும் வழங்கப்படுகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த ஹானர் வாட்ச் GS 3 உள்ளது.


    மேலும் 32MB ரேம், 4GB இண்டர்னல் மெமரி, கைரோஸ்கோப் சென்சார், அக்செல்லோமீட்டர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஏர் பிரெஷர் சென்சார், மைக்ரோபோன், ஸ்பீக்கர், ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஐ.ஓ.எஸ். 9 உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.

    இந்த ஸ்மார்ட் வாட்ச் மிட்நைட் பிளாக், ஓசன் புளூ மற்றும் கிளாசிக் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹானர் வாட்ச் GS 3 மாடலின் விலை இந்திய மதிப்புப்படி ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் இன்று முதல் (ஜூன் 7) துவங்கி இருக்கிறது. 

    ஹீவாய் ஹானர் பிராண்டின் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மே 21 ஆம் தேதி லண்டனில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஹானர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


    புகைப்படம் நன்றி: Win Future

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹானர் 20 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் ஸ்கிரீன், கிரின் 980 7 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், இரண்டு 2 எம்.பி. கேமரா, f/1.75, f/2.4 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் மே 21 ஆம் தேதி தெரியவரும்.
    ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Honor10Lite



    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே , கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை, EMUI 9.0, 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 24 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ஹானர் 10 லைட் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் கிரேடியன்ட் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    ×