search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்
    X

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

    • மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.
    • தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ேதாம், இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மக்களின் உயிரினை காத்து சமூகங்களுக்கு ஆற்றி வரும் மருத்துவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாகவும் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்அருள்தாஸ் தலைமையில் இந்நிகழ்ச்சி யானது நடத்த ப்பட்டது.

    இதில் மருத்துவர்கள் வி.தனபாலன், ரவீந்திரன், சாந்தி பவுல்ராஜ், ஏ.அஜந்தன், வி.மாரிமுத்து, இனியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களான கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களுக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் பொன்னாடை அணிவித்து மருத்துவ மேதை டாக்டர் பிதான் சந்திரராய் நினைவாக விருதுகள் வழங்கி, மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் தங்களின் அனுபவ த்தையும், பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டதோடு தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ததாகவும் இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை எனவும், அவ்வாறு பெருமைப்படுத்திய தஞ்சை தலைமை அஞ்சலகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.மேலும் இனிவரும் கொரோனா காலங்களில் எவ்வாறு நாம் இருக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியின் முன்னதாக மனமகிழ் மன்ற செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார்.தஞ்சை தலைமை அஞ்சலகத்தின் அலுவலர்கள் எஸ்.சித்ரா, வி.தேவிசௌதா ஆகியோர் மருத்துவர்களின் சிறப்புகள் குறித்து பேசினர். இதில் சிறுசேமிப்பு முகவர்கள் நீலகண்டன்,குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்ச லகத்தின் துணை அஞ்சலக தலைவர் எம்.குழந்தைராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×