search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூவாய்"

    • வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    • மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.

    இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • மசாஜ் செய்யும் போது இந்த அம்சம் கொண்டு மனதை இளைப்பாறச் செய்யும் இசையை கேட்டு அனுபவிக்கலாம்.
    • போன் கண்டக்ஷன் தொழில்நுட்பம் அதிக தெளிவான ஆடியோவை மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாமல், கேட்க செய்கிறது.

    ஹூவாய் நிறுவனம் பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜரை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐ மசாஜர் அதிநவீன விப்வேவ் வைப்ரேஷன் வேவ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த மசாஜரில் 14 பெரிய காண்டாக்ட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நுன்னிய அதிர்வுகளை ஏற்படுத்தும் மைக்ரோ-வைப்ரேஷன் மோட்டார் உள்ளது. இவை கண்களை சுற்றி முழுமையான மசாஜ் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜரில் ஹாட் கம்ப்ரெஸ் அம்சம் உள்ளது. இது கண்களின் வடிவம் கொண்ட இரண்டு மெட்டல் மசாஜ் ஹெட்களை கொண்டு கண்களை சுற்றி வெப்பத்தை பாய்ச்சும். இந்த வழிமுறை மென்மையான வெப்பம் மற்றும் சவுகரியமான மசாஜை வழங்குகிறது. இந்த மசாஜரில் உள்ள போன் கன்டக்ஷன் தொழில்நுட்பம் மண்டை ஓடு வழியே ஒலியை பாச்சுகிறது. மசாஜ் செய்யும் போது இந்த அம்சம் கொண்டு மனதை இளைப்பாறச் செய்யும் இசையை கேட்டு அனுபவிக்கலாம்.

     

    இதன் போன் கண்டக்ஷன் தொழில்நுட்பம் அதிக தெளிவான ஆடியோவை மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாமல், கேட்க செய்கிறது. அந்த வகையில், இந்த சாதனம் கொண்டு மசாஜ் மற்றும் பொழுதுபோக்கு என இருவித பயன்களையும் பெற முடியும். பயனர் முகத்தில் மிக கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள துணி மிக மென்மையாக இருப்பதோடு, 180 டிகிரி வரை மடிக்கக்கூடியது ஆகும்.

    ஒட்டுமொத்தத்தில் 245 கிராம் எடை கொண்டிருக்கும் பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜர் தற்போதைய ஸ்மார்ட்போன்களை விட மிக குறைந்த எடை கொண்டுள்ளன. இந்த மசாஜரை ஹார்மனி ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் ஹாங்மெங் சிலான் ஆப் உடன் ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம். பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜரின் விலை 749 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 915 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போல்டபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • ஹூவாயின் முதல் ப்ளிப் போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூவாய் அறிமுகம் செய்த P50 பாக்கெட் ப்ளிப் போனினை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் பாக்கெட் S மாடலில் 6.9 இன்ச் FHD+ மடிக்கக்கூடிய பிலெக்சிபில் ஸ்கிரீன், 1.04 இன்ச் அளவில் வெளிப்புற AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 778 4ஜி சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 40MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 10.7MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஹூவாய் பாக்கெட் S மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

    ஹூவாய் பாக்கெட் S அம்சங்கள்:

    6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778 4ஜி பிராசஸர்

    அட்ரினோ 642L GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹார்மனி ஒஎஸ் 3.0

    டூயல் சிம்

    40MP ட்ரூ-க்ரோமா கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    10.7MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4000 எம்ஏஹெச் பேட்டரி

    40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹூவாய் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், பாரஸ்ட் சில்வர், மிண்ட் கிரீன், பின்க், ப்ரிசம்ரோஸ் கோல்டு மற்றும் ஐஸ் க்ரிஸ்டல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 5888 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 68 ஆயிரத்து 010 என துவங்குகிறது.

    • ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மனி ஒஎஸ் கொண்டு இயங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதில் தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு ஹூவாய் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை அசாத்திய கேமரா அம்சங்களுடன் அறிமுகம் செய்து இருந்தது.

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து ஹூவாய் நிறுவனம் கூகுள் மற்றும் இதர அமெரிக்க நிறுவனங்களின் சிப்செட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு சிக்கல்களை கடந்தும் ஹூவாய் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதை நிறுத்தவில்லை.


    அந்த வகையில், ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனில் எமர்ஜன்சி பேட்டரி மோட் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பதாக சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சமானது ஸ்மார்ட்போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனாலும், அழைப்புகளை எப்படியாவது மேற்கொள்ள செய்திடும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஹார்மனி ஒஎஸ் 3.0-இன் கீழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் மேட் 50 மாடல்களில் இந்த ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அம்சம் அழைப்புகளை மேற்கொள்வதோடு குறுந்தகவல் அனுப்புவது, டாக்யுமெண்ட் மற்றும் லொகேஷன் கோட்களை ஸ்கேன் செய்யும் என கூறப்படுகிறது.

    • ஹூவாய் நிறுவனம் கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.
    • இத்துடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.

    ஹுவாய் நிறுவனம் புது இயங்குதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹார்மோனி OS3 என பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தை வருகிற ஜூலை 27-ந் தேதி அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாம். அன்றைய தினம் நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட்டில் இத்துடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.

    இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.


    அது அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டே ஆகும் நிலையில் தற்போது அடுத்த இயங்குதளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

    • ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
    • ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 800 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

    ஹூவாய் நிறுவன குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் வீடியோ கால் கூட செய்ய முடியுமாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சுலபமாக வீடியோ காலில் உரையாட உதவியாக 5 மெகாபிக்சல் ஹெச்.டி. கேமராவும் இந்த வாட்ச்சில் இடம்பெற்று உள்ளது.

    ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இதில் சில ஸ்போர்ட்ஸ் மோட்களும் உள்ளது. ஸ்டெப் கவுண்டர் மற்றும் குழந்தையின் நடவடிக்கைகளையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும். குழந்தை இருக்கும் இடத்தை துள்ளியமாக கண்டறிய ஜிபிஎஸ் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.


    ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 800 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 40 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியுமாம். வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.11 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×