search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "graduation ceremony"

    • நிகழ்ச்சிக்கு மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார்.
    • முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கினார்

    கடையநல்லூர்:

    கடையநல்லூர், மெயின் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடத்தப்படும் ஜாமிஆ அன் நஜாஹ் அரபிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பஷீர் அஹ்மத் உமரி தொகுத்து வழங்கினார். மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி செயலாளர் முஹம்மது காசிம் சின்சா, பேராசிரியர்கள் ஜபருல்லாஹ் பத்ரி, முஹிபுல்லாஹ், மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் முஹம்மது கோரி வரவேற்று பேசினார்.

    முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், அப்துல் மஜீத், கஸ்ஸாலி முஹம்மது கோரி, முஹம்மது யஹ்யா, ரபீக் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் பட்டமளிப்பு விழா நடை பெற்றது.
    • விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனையின் 52-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

    இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, 52-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.

    முதல் பிரதியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். விழாவில் தொழில் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாகிப், எம்.கே.எம். முகம்மது நாசர், அகமது கபீர், நெல்லை லாட்ஜ் நிக்மத்துல்லா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மருத்து வர்கள் முருகன், அழகேசன், கிரிஷ் தீபக், அகமது யூசுப், முகம்மது இப்ராஹீம், முகம்மது கனி, ஜியாவுல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனை மற்றும் ஷிபா கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    • விருதுநகர் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நிறுவனர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இயக்குநர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் பல்கலை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தங்கராஜ், 511 இளங்கலை, 11 முதுகலை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் 2019-20 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற 588 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் டி.ஜி.பி., எம்.ரவி பட்டங்களை வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-  மாணவா்கள் கவனத்தை சிதறவிடாமல் உணா்வுப்பூா்வமாகக் கல்வியைக் கற்றால் எளிதில் வெற்றி பெறலாம். பட்டம் பெற்றதுடன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதிலும் பெற்றோரைக் கவனிப்பது தலையாய கடமையாகும். இளைஞா்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பழக்கமானது இளைஞா்களின் குறிக்கோள், சமூகம் மற்றும் குடும்பத்தை விட்டே விலக்கிவிடும். ஆகவே மாணவா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.  

    • திருச்சியை அடுத்த சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும், பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்றும் சிறப்பு விருந்தினர் கேட்டுக்கொண்டார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் முனைவர். எஸ்.குப்புசாமி, கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். டி.சீனிவாசன் மற்றும் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை இன்போசிஸ் லிமிடெட்டின் மேம்பாட்டு மையத்தின் இணை துணைத் தலைவர் மற்றும் தலைவர் சூர்யா பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

    இதில் முதல் 21 தரவரிசையாளர்களைத் தவிர, மொத்தம் 1,223 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், மாணவர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை கூறும் வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றார்.

    மேலும், அவர் தனது எழுச்சியூட்டும் கதையுடன், பொறியியல் துறையில் சமீபத்திய போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தும் பழக்கத்தை வளர்க்கவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சூர்யா தனது பட்டமளிப்பு உரையில், பட்டதாரிகள் தங்கள் தொழில் சூழலில் வெற்றிபெற உதவும் சில திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களை வலியுறுத்தியதோடு, சரியான பாதையில் கவனம் செலுத்துவதன் மூலம், வாழ்வில் வெற்றியின் உச்சத்தை அடையலாம் எனவும், அதற்கு ஆரோக்கியமான சூழல் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

    வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும் கூறினார். பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    • 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 320 மாணவன் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார் வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் டி. கே. கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தார். விழாவில் கோவை அக்வா சப்என்ஜினீயரிங் நிறுவனத்தின் நரேந்திரன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில் 286 இளநிலை பிரிவு மாணவ- மாணவிகளுக்கும், 34 முதுநிலை பிரிவு மற்றும் மேலாண்மை துறை மாணவன் மாணவிகளுக்கும் என மொத்தம் 320 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நாஸ்காம் துணைத் தலைவர் உதயசங்கர் மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்வுத்துறை தலைவர் லட்சுமி பிரியா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி அன்பரசு நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் 19-வது மற்றும் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

    லாஜிடெக் நிறுவ னத்தின் முதன்மை மென்பொறியாளரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான அப்துல் ரசீத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    பட்டம் பெற்ற பொறியாளர்கள் இதோடு தங்களது முயற்சியை நிறுத்தி விடாமல் கல்லூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தயார் செய்துகொள்ள வேண்டும். கல்லூரியில் தேர்வு செய்த துறைகளுக்கேற்றவாறு திறமைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    பல்வேறு நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் உங்களை தயார் செய்து கொண்டு ஒவ்வொரு துறைகளிலும் சாதனைகளை வெளிக் கொணர வேண்டும்.

    ஒவ்வொரு பொறியா ளாருக்கும் ஒழுக்கம், கல்வி இவை இரண்டும் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நான் கற்ற கல்லூரியிலேயே நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வு எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.

    இதுபோன்று நீங்களும் சாதனைகளை அடைவதற்கு கூடுதலாக உங்களின் பங்களிப்பை வழங்கி வாழ்க்கை பயணத்தை இனி தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாலிகு கலந்து கொண்டார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருபவரும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான லட்சுமி முன்னிலை வகித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

    செய்யது அம்மாள் அறக்க ட்டளை உறுப்பினர்கள் டாக்டர். பாபு அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, டாக்டர். செய்யதா அப்துல்லா, ராசாத்தி அப்துல்லா, முதல்வர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 483 இளநிலை பொறியாளர்களுக்கும், 77 முதுநிலைப் பொறியா ளார்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் 2 தங்கப் பதக்கங்களை கல்லூரி மாணவர்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கணினித்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பட்டமளிப்பு விழாவிற்கு, கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
    • மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர் ஷண்மதி, நேஷனல் பொறியியல் கல்லூரிச் செயலர் சங்கரநாராயணன், இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல், தொழி லதிபர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்பவும் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள். நாம் எப்படி சாதிக்க முடியும், எப்படி முன்னேறுவது என்று சிந்தியுங்கள்.அப்போது தான் மாணவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறலாம் என்றார்.

    தொடர்ந்து, இளநிலை பொறியியல் மாணவர்கள் 638 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 12 பேருக்கும் துணைவேந்தர் குமார் பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்றவர்களில் 39 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் கல்லூரி முதல்வர்கள் ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர், முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலைவாணி, ரமணன் மற்றும் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் உதவி பேராசிரியர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

    திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சத்யானந்த சுவாமிஜி தலைமை தாங்கினார். திருப்பராய்த்துறை, ராம கிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் ஸ்ரீமத் அபேதானந்தா சுவாமி, கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா பள்ளி செயலர் யதீஸ்வரி தவப்ரியா அம்பா, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குநர் சந்திரசேகரன் விழாவின் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையினை வழங்கினார்.

    தமிழக அரசின் ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான திருப்பராய்த்துறை ராம கிருஷ்ண தபோவனத்தின் பொதுக்குழு உறுப்பினரு மான சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    விழாவில் திருப்பராய்த்துறை, ஸ்ரீராம கிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் ஸ்ரீமத் அேபதானந்தா சுவாமி, செயலர் ஸ்ரீமத் சத்யானந்த சுவாமி, சிறப்பு விருந்தினர் சண்முகம் ஆகியோர் 592 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.

    அனைத்து துறைத்தலைவர்கள், பட்டதாரிகளின் வகுப்பு பொறுப்பாசிரியர்கள், பட்டதாரிகளின் பெற் றோர்கள், உறவினர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    முதுநிலை கணினி பயன்பாட்டி யல்துறை உதவி பேராசிரியர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

    விழாவி னை மாணவிகள் பேரவை தலைவியும், கணினி பயன்பாட்டி யல் துறைத் தலைவருமான அனுஷா தொகுத்து வழங்கினார்.

    • முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் இ. டி. என். பொது மேலாளர் மோகன்ராஜ் ,அரசு கலைக் கல்லூரி முதல்வர் கல்யாணி ,உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், சமூக ஆர்வலர்கள் ராமராஜ் , செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.முடிவில்உதவி பயிற்சி அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    • திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு அகில இந்திய பட்டமளிப்பு விழா நடந்தது.
    • இதில் வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது..

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு அகில இந்திய பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.

    பயிற்சி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பணியமர்த்தும் அலுவலர் தங்கமுத்து வரவேற்றார். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தனியார் நிறுவனத்தில் பயிற்சிக்காக 79 சதவீத மாணவர்கள் பணியமர்த் தப்பட்டனர்.

    இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழக த்தின் முதல்வர் சுதா, மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முத்தையா, திண்டுக்கல் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் ஜெயராமன், பயிற்சி அலுவலர் பிரகாசம், தொழிலதிபர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து சான்றிதழ் வழங்கினர்.

    நிறைவாக உடற்பயிற்சி அலுவலர் அழகர் நன்றி கூறினார்

    • செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விநாயகா மிஷன் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் 45 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். விநாயகா மிஷன் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் 45 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அவர் பேசுகையில், பட்டம் பெற்றவர்கள் செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர்களாக பேச்சு குறை பாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தகுந்த பயிற்சியை ெகாடுப்பது இந்த சிறப்பு கல்வியின் அங்கமாகும்.

    செவித்திறன் அறிந்து காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் சிகிச்சை வழங் குவதில் உறுதுணையாக இருக்கவும், சரியான காது கருவிகளை பொருத்துவதில் நிபுணத்துவம் வழங்குவதும் இந்த கல்வியின் சாராம்சம் என்று குறிப்பிட்டார்.

    தலைமை விருந்தினராக வல்லுனர்கள் பங்கேற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுள்ள மாற்று திறனாளிகளுக்கான நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் நசிகேதாராவுட் பேசும் போது, நம் நாட்டில் தேவைக்கும் மிக குறை வான வல்லுனர்கள் இந்த பிரிவில் இருப்பதா ல் மாணவர்கள் இந்த பிரிவு கல்வியை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்தார்.

    விழா வில் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கோட்டூர், டாக்டர் மகாலட்சுமி, மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங், பேராசிரியை ராஜலட்சுமி, இணை பதிவாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை அமுல்யா நன்றி கூறினார்.

    ×