என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்லூரி பட்ட மளிப்பு விழா
    X

    ஆறுபடை வீடு செவித்திறன் குறைபாடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.

    கல்லூரி பட்ட மளிப்பு விழா

    • செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விநாயகா மிஷன் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் 45 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். விநாயகா மிஷன் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் 45 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அவர் பேசுகையில், பட்டம் பெற்றவர்கள் செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர்களாக பேச்சு குறை பாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தகுந்த பயிற்சியை ெகாடுப்பது இந்த சிறப்பு கல்வியின் அங்கமாகும்.

    செவித்திறன் அறிந்து காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் சிகிச்சை வழங் குவதில் உறுதுணையாக இருக்கவும், சரியான காது கருவிகளை பொருத்துவதில் நிபுணத்துவம் வழங்குவதும் இந்த கல்வியின் சாராம்சம் என்று குறிப்பிட்டார்.

    தலைமை விருந்தினராக வல்லுனர்கள் பங்கேற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுள்ள மாற்று திறனாளிகளுக்கான நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் நசிகேதாராவுட் பேசும் போது, நம் நாட்டில் தேவைக்கும் மிக குறை வான வல்லுனர்கள் இந்த பிரிவில் இருப்பதா ல் மாணவர்கள் இந்த பிரிவு கல்வியை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்தார்.

    விழா வில் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கோட்டூர், டாக்டர் மகாலட்சுமி, மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங், பேராசிரியை ராஜலட்சுமி, இணை பதிவாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை அமுல்யா நன்றி கூறினார்.

    Next Story
    ×