search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government school"

    • புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

    குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

    இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

    2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    • அரசு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை கிழக்கு ஒன்றியம் கருப்பாயூரணி எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பில் 'அறிவியல் களியாட்டம்' என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். சென்னையில் இருந்து அறிவியல் ஆசான் அறிவரசன் வருகை புரிந்து செயற்கை ரத்தம் உருவாக்குதல், சினிமாக்களில் புகை உருவாக்கும் விதம், கார்களில் ஏர் பலூன் செயல்படும் விதம், நெருப்பு உருவாதல், பரப்பை பொறுத்து அழுத்தம் எவ்வாறு மாறுகிறது என்ற சோதனை, ஒளி உருவாதல், நுரை உருவாக்கும் சோதனை, புகை உருவாதல் போன்ற பல வகையான சோதனைகளை செய்து காண்பித்து அறிவியல் மனப்பான்மை குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆக்கம் சங்கர், மஞ்சப்பை அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன், கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது கனி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

    • தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.
    • கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே தென்பொன்முடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்வி முடித்து பட்ட படிப்புக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 2003-ம் ஆண்டு இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இதில் இந்த பள்ளியில் 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நண்பர்கள் சந்தித்துக் கொண்டதால் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் அந்த காலகட்டத்தில் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர், ஆசிரியைகளையும் வரவழைத்து அவர்களையும் கவுரப்படுத்தி, அவர்களிடம் வாழ்த்தும் பெற்று கொண்டனர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் தங்கள் நண்பர்களிடம் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

    அத்துடன் தங்கள் காலகட்டமான 90 காலகட்டத்தில் இருந்த அப்போதைய திண்பண்டங்களான ஆரஞ்சு மிட்டாய், பொரி உருண்டை, ஜவ்வு மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், புளி மிட்டாய் என பல்வேறு விதமான மிட்டாய்களை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் இந்த மிட்டாய்களின் சிறப்பினையும், தாங்கள் படித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்தனர்.

    இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.

    அத்துடன் பள்ளி மைதானத்தை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்களும் வழங்கினர்.

    கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது. 

    • மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு 60 மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது
    • தனுஷ் குமார் எம்.பி. , வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினர்.

    சிவகிரி:

    தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறை யில் தரையில் அமர்ந்து படிப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு 60 மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது. தனுஷ் குமார் எம்.பி. தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் மாணவர்களுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கட்டபொம்மன், தகவல் தொழில்நுட்ப அணி சுந்தர், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் ஸ்டாலின், உள்ளார் விக்கி, தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
    • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

    இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சென்றனர்.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனை கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதலமைச்சர் , பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய வைகளை சீராக வைத்துக் கொள்வ தற்கெனவும், பல்வேறு சிறப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளார். அந்தவகையில் சிவகங்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில், சிவகங்கை அருங்காட்சி யகம், கீழடி அருங்காட்சி யகம், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி மையம், இது தவிர திருமலை மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் ஆகிய இடங்களுக்கு மாணவ, மாணவியர்கள் அழைத்துச் செல்லப்படு கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மிகவும் சிறப்பாக அமைகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார்.
    • பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, முக்கிய பிரமுகர்களும் மாணவ- மாணவிகளும் பாராட்டினார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் அருந்ததிபுரத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், பொறுப்பாசிரியருக்கு பாராட்டு விழா  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியை கோமதி தலைமை தாங்கினார். இதில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார்.

    அதனைத் தொடர்ந்து இந்தப் பள்ளியில் பணியாற்றி பணியிட மாற்றம் செய்யப்பட்ட பொறுப்பாசிரியை கோமதிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, முக்கிய பிரமுகர்களும் மாணவ மாணவிகளும் பாராட்டினார்கள். தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் வீரமோகன், திமுக மாநில நிர்வாகிகள் மதிவாணன், ஜவஹருல்லா, மீரன் வெங்கடேசன், ஜோதி, பாஸ்கர், குட்டி, குமார், சேகர், ஆறுமுகம், முருகன் மற்றும் பெற்றோர்களும் அப்பகுதி முக்கிய பிரமுகர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கேடயங்கள் வழங்கப்பட்டது.
    • தலைவர் எம்.வி. சண்முகராஜ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றிய அரசு பள்ளி கல்வி அறக்கட்டளை சார்பில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைவர் எம்.வி. சண்முகராஜ் தலைமையில், துணைத்தலைவர் எம்.எஸ். அருண்குமார் முன்னிலையில், வெள்ளகோவில் ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளகோவில், துரை ராமசாமி நகர் அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கேடயங்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் செயலாளர் சி. தண்டபாணி, மகாத்மா காந்தி நற்பணி மன்ற தலைவர் ராஜ்குமார், ஆசிரியர்கள் சி.பாலசுப்ரமணியம், குணசேகரன் ஆகியோர் உடன் சென்றனர்.

    • எம்.பி.பி.எஸ், பல், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.
    • அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதையடுத்து முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், புதுவை யூனியன் பிரதேச அரசு நடத்தும் பள்ளியில் 1 முதல் பிளஸ்2 வரை படித்த மாணவர்களுக்கு மொத்த இடஒதுக்கீட்டில் 10 சதவீதம் கிடைமட்ட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ், பல், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். அதே சமயம் நீட் தேர்வில் வெற்றி பெறுவது தகுதியாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற சென்டாக்கில் இதுவரை விண்ணப்பிக்காத அரசு பள்ளி மாணவர்கள் வரும் 8-ம் தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின் அரசின் 10 சதவீத ஒதுக்கீட்டீல் சேரும் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

    ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால் இணையதளம் சென்று அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டும். மேலும் பிளஸ்-2 வரை படித்த பள்ளி மாற்று சான்றிதழ், படிப்பு சான்றிதழ், வருவாய்த்துறை குடியுரிமை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொது, ஓ.பி.சி, எம்.பி.சி, இ.பி.சி, பி.சி.எம், பி.டி பிரிவினருக்கு கட்டணமாக ரூ.ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.

    • தேசிய விளையாட்டு நாள் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    செல்லிப்பட்டு அரசுப் உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு நாள் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். தலைமை யாசிரியர் அனிதா தலைமை தாங்கினார்.

    விழாவில் தேஷ்னா தொண்டு நிறுவனம் சார்பில் அமலா, நந்தகுமார், இளம்பரிதி மற்றும் ரிஷி ஆகியொர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். ஆசிரியை அமலா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியைகள் ராஜேஷ்வரி, மீனா, அமுதா, ஜான்சி, விமலி மற்றும் இளவரசி ஆகியோரும் பள்ளி ஊழியர்களும் செய்திருந்தனர். முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.

    • அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.
    • பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் 2வது அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.

    இதன் காரணமாக அப்பகுதியை கடந்து செல்லும்போது போது துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே வகுப்பறை மற்றும் சமையல் கூடம் இருப்பதால் சாக்கடையில் உருவாகும் தொற்றுக்கிருமிகள் மூலமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று இப்பகுதியில் சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் மற்றும் பாம்பு, பூச்சிகள் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக வருகிறது.

    எனவே மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×