என் மலர்
நீங்கள் தேடியது "கழிவு நீரால் சுகாதார சீர்கேடு"
- அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.
- பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் 2வது அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியை கடந்து செல்லும்போது போது துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே வகுப்பறை மற்றும் சமையல் கூடம் இருப்பதால் சாக்கடையில் உருவாகும் தொற்றுக்கிருமிகள் மூலமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று இப்பகுதியில் சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் மற்றும் பாம்பு, பூச்சிகள் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக வருகிறது.
எனவே மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 6 மாதங்களாக புதுராமச்சந்தி ராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால் தூர்வார ப்படவில்லை.
- புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்ட மனூர் அருகே புதுராம ச்சந்திராபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாக்கடை வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக புதுராமச்சந்தி ராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால் தூர்வார ப்படவில்லை. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் வடிகால்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி காணப்படுகிறது.
சாக்கடை கழிவு நீரில் இருந்து கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் இரவு நேரங்களில் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது. எனவே கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






