என் மலர்
நீங்கள் தேடியது "Tables"
- பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் மேஜைகளை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்
சங்கரன்கோவில்:
மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டியாபுரம் அரசு ஊராட்சி பள்ளிக்கு தென்காசி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்களுக்கான இருக்கைகள் மற்றும் மேசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். இதில் எம். பி. நிதியிலிருந்து வழங்கப்பட்ட இருக்கைகள் மற்றும் மேஜைகளை ராஜா எம்.எல்.ஏ. பள்ளிக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச் செல்வி, பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி, கவுன் சிலர் அருள்சீலி, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, துணைச் செயலாளர் வினுச்சக்கர வர்த்தி, எம்.எல்.எஸ். பிரேம்குமார், தங்கையா, சுப்பையா, ரவிச்சந்திரன், சங்கர், செல்வராஜ், பூசை பாண்டியன், மயில்வாகனன், நவமணிபாண்டியன், கோமதி ராஜ், பாலசுப்பிர மணியன், முத்தமிழ் செல்வ ன், அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மணித் தங்கம் நன்றி கூறினார்.
- கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- ரூ.25.408 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டிட பணிகள் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.25.408 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவிகளுக்கான இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம்,திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ் கலந்து கொண்டனர்.