search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl harassment"

    தூத்துக்குடியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் மணி (வயது68). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டிலிருந்து ஓட்டலுக்கு பைக்கில் சென்று வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அங்கு சென்ற மணி சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளாள். 

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் மணியை `போக்சோ சட்டத்தில்' கைது செய்தனர். 
    ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கெடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (வயது 25),எலக்ட்ரீசியன், இவர் மலைமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உசிலம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிம்மநத்தத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது 17 வயது மகள் கடந்த 7-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26), சின்னச்சாமி (27), கணேசன் (43) ஆகிய 3 பேரும் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டு சிறுமியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தானம், உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து சுரேஷ், சின்னத் தம்பி, கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருக்கோவிலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான திருமணமான வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் காரணை பெரிச்சானூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இவளது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் (வயது 25), காமன் (31) ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதுபற்றி தனது தாயிடம் அந்த சிறுமி தெரிவித்தாள். இதையடுத்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் மற்றும் காமன் ஆகியோரை கைது செய்தனர்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட காமனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    காட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (47), ஆட்டோ மெக்கானிக். இவரது தங்கை பக்கத்து வீட்டில் கணவர், 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை 5 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். கந்தசாமி சிறுமியை வீட்டுக்குள் அழைத்தார். மாமா என்று பாசத்தோடு குழந்தை ஓடிச் சென்றது. அவளை வீட்டுக்குள் தூக்கி சென்ற கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறுமியை மீட்ட அவர்கள் கந்தசாமியை அடித்து உதைத்தனர். பின்னர், காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகேயுள்ள கிழவனேரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனது அண்ணனுடன் அந்தப்பகுதியில் உள்ள மந்தையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த குமார் (17) என்பவர் அங்கு வந்தார். அவர் சிறுமியை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்த சிறுமியின் சகோதரர் சத்தம் போட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.

    பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் குமார் ஓடிவிட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி திருமலைநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு திருமண ஆசைகாட்டி, கடந்த 30-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் புதிய வீடு கட்டினார்.

    23.1.2017 அன்று அந்த வீட்டுக்கு 13 வயது சிறுமியை அழைத்துவந்து பாலியல் தொல்லை செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் அவரது தாய், தந்தையை கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டினார். பின்னர் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கர நாராயணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    தண்டனை பெற்ற சங்கரநாராயணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அரசு வக்கீல் செல்வப்பிரியா கூறும்போது, பாலியல் தொல்லை வழக்கில் சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.  #CuddaloreCourt

    பாகிஸ்தான் பள்ளியில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. #ChildAbuse #AttaullahMarwat
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவர் அத்தாவுல்லா மார்வத். இவர் அங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அதில் முதல்வராகவும் பணிபுரிகிறார். இவர் அங்கு படிக்கும் சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்தார். அதை தொடர்ந்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மார்வத்திடம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர் இதுபோன்ற செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டு வீடியோ எடுப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு என சாதாரணமாக தெரிவித்தார். #ChildAbuse #AttaullahMarwat
    திருவையாறு அருகே பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். #Arrested
    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் தேவி(வயது 14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). ராஜா சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார். இதனால் அவர் மணல் ஏற்ற செல்லும்போது தனது மகள் தேவியையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். அப்போது மணல் ஏற்ற வந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவன் தேவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அந்த சிறுவன், தேவியின் வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் தேவியை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் தேவியை அடித்து உதைத்து அவரது ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது.

    இதை அறிந்த தேவியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணனிடம் சென்று இது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தேவியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி தனது தாயுடன் பேச அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகேந்திரன் செல்போனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் மகேந்திரனின் செல்போன் திடீரென மாயமானது. இந்த செல்போனை தேவிதான் திருடி சென்று விட்டார் என கருதி மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த வித்யா, சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து தேவியை அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததுடன் அவரது உடலில் சூடு வைத்ததாக தெரிகிறது. இதில் தேவி மயங்கி விழுந்தார். உடனே மகேந்திரன் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த தேவி தன்னை சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். பின்னர் அவர், திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா அரசு மருத்துவமனைக்கு சென்று தேவியிடம் விசாரணை நடத்தினார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன்(29), மகேந்திரன்(35), சிவக்குமார்(31), வித்யா(27), மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Arrested
    குலசேகரம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெம்போ டிரைவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே உள்ள வண்டிபிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). டெம்போ டிரைவர். இவர் 8.1.2016-ந் தேதி பக்கத்து ஊரை சேர்ந்த 13 வயது சிறுமியை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 

    இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
    அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் தடையப்ப தெருவை சேர்ந்தவர் செல்வி(11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் படித்து வருகிறார். 

    இந்நிலையில்செல்வியின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக்  கொண்டிருந்தார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாரிமுத்து (வயது 19)  என்பவர் அங்கு வந்தார். அவர் செல்வியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். 
    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மாரி முத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

    இது குறித்து செல்வியின் பெற்றோர் அரியலூர் அனைத்து  மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரி முத்துவை  போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். 
    ×