search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் உள்பட 2 பேர் கைது
    X

    திருக்கோவிலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் உள்பட 2 பேர் கைது

    திருக்கோவிலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான திருமணமான வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் காரணை பெரிச்சானூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இவளது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் (வயது 25), காமன் (31) ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதுபற்றி தனது தாயிடம் அந்த சிறுமி தெரிவித்தாள். இதையடுத்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் மற்றும் காமன் ஆகியோரை கைது செய்தனர்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட காமனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×