என் மலர்
நீங்கள் தேடியது "uncle"
- விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
- விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
அதில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும், அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை என்று ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்து கொள்வார் என்று திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (47), ஆட்டோ மெக்கானிக். இவரது தங்கை பக்கத்து வீட்டில் கணவர், 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை 5 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். கந்தசாமி சிறுமியை வீட்டுக்குள் அழைத்தார். மாமா என்று பாசத்தோடு குழந்தை ஓடிச் சென்றது. அவளை வீட்டுக்குள் தூக்கி சென்ற கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறுமியை மீட்ட அவர்கள் கந்தசாமியை அடித்து உதைத்தனர். பின்னர், காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவர், போளூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (35) என்பவருக்கு தனது மகள் மலரை திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணத்திற்கு பிறகு, சங்கர் மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், சங்கர் சில நாட்களாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்றார்.
இதற்கிடையே மாமனார், மருமகனிடையே சொத்து தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருமகன் மீதான ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகளை ஏழுமலை வீதியில் விரட்டி விரட்டி தாக்கினார்.
ஊருக்கு வந்த சங்கர், நேற்று இரவு மாமனாரிடம் மோதலில் ஈடுபட்டார். உருட்டுக்கட்டையால் மாமனார் என்றும் பார்க்காமல் கொடூரமாக தாக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் ஏழுமலை சுருண்டு விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலை மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வாழபந்தல் போலீசார், கொலை வழக்குப்பதிந்தனர். மாமனார் இறந்ததையறிந்த சங்கர் தலைமறைவானார். போலீசார் அவரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இன்று காலை திமிரியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்காக கலவை செல்லும் சாலையில் உள்ள கனியனூர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த சங்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்கனவே, மாமனார், மருமகனிடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சங்கரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






