என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
Byமாலை மலர்3 Dec 2018 10:46 AM GMT (Updated: 3 Dec 2018 10:46 AM GMT)
திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:
திருமங்கலம் அருகேயுள்ள கிழவனேரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனது அண்ணனுடன் அந்தப்பகுதியில் உள்ள மந்தையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த குமார் (17) என்பவர் அங்கு வந்தார். அவர் சிறுமியை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்த சிறுமியின் சகோதரர் சத்தம் போட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் குமார் ஓடிவிட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X