என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு- பாகிஸ்தான் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்31 Oct 2018 5:21 AM GMT (Updated: 31 Oct 2018 5:21 AM GMT)
பாகிஸ்தான் பள்ளியில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. #ChildAbuse #AttaullahMarwat
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவர் அத்தாவுல்லா மார்வத். இவர் அங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அதில் முதல்வராகவும் பணிபுரிகிறார். இவர் அங்கு படிக்கும் சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.
18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்தார். அதை தொடர்ந்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மார்வத்திடம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர் இதுபோன்ற செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டு வீடியோ எடுப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு என சாதாரணமாக தெரிவித்தார். #ChildAbuse #AttaullahMarwat
பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவர் அத்தாவுல்லா மார்வத். இவர் அங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அதில் முதல்வராகவும் பணிபுரிகிறார். இவர் அங்கு படிக்கும் சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.
18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்தார். அதை தொடர்ந்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மார்வத்திடம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர் இதுபோன்ற செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டு வீடியோ எடுப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு என சாதாரணமாக தெரிவித்தார். #ChildAbuse #AttaullahMarwat
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X