search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested building worker"

    அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் தடையப்ப தெருவை சேர்ந்தவர் செல்வி(11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் படித்து வருகிறார். 

    இந்நிலையில்செல்வியின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக்  கொண்டிருந்தார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாரிமுத்து (வயது 19)  என்பவர் அங்கு வந்தார். அவர் செல்வியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். 
    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மாரி முத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

    இது குறித்து செல்வியின் பெற்றோர் அரியலூர் அனைத்து  மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரி முத்துவை  போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். 
    சேதராப்பட்டு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு அருகே கரசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன், டிரைவர். நேற்று இவரது குழந்தைகள் அருகில் உள்ள தென்னந்தோப்பில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (41) என்பவர் அந்த குழந்தைகளை மிரட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை கலையரசனின் மனைவி பாஞ்சாலி (35) கிருஷ்ணமூர்த்தியிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி பாஞ்சாலியை தாக்கினார். மேலும் ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து கொலை செய்து விடுவதாக பாஞ்சாலியை மிரட்டினார்.

    இதுகுறித்து பாஞ்சாலி சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல், மானபங்கம் செய்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே இதுபோல் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×