search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Meeting"

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • ஒரத்தநாட்டில் நாளை (திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுக் கூட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நாளை(திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமை ச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் மக்களுக்கான ஆட்சியை வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளராகி முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார்.

    அதன்படி எடப்பாடி பழனிச்சாமி நாளை(திங்கட்கி ழமை) மாலை 3 மணிக்கு கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

    இதைத்தொ டர்ந்து மாலை 5 மணிக்கு ஒரத்தநாட்டில் ஆயிரக்கண க்கானோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்-அமை ச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    தஞ்சை மாவட்டத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி, திருவையாறு, திருக்கருகாவூர், மேலஉளூர் உள்ளிட்ட இடங்களில் கட்சி பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பட்டுக்கோ ட்டை முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சேகர், ஒரத்தநாடு பேரூ ராட்சி தலைவர் மா.சேகர், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செ யலாளர் கு.ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தஞ்சை நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் என்.எஸ்.சரவணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆசைத்தம்பி, தெலுங்கன்குடிக்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் பஞ்சு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த தையொட்டி நெல்லை மாநகர் தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மாலைராஜா தலை மை தாங்கினார். முன்னாள் மண்டல சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா, ராவணன், உடன்குடி தன பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இளைஞர் அணி வக்கீல் அலிப் மீரான், நிர்வாகிகள் அப்துல் கையூம், பூக்கடை அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் கோபி, அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டி, இளைஞரணி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் கண்டன உரையாற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான சாமுவேல் ஞானதுரை தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மண்டல தலைவர் ராஜன், மடத்தூர் தனபால்ராஜ், காமாட்சி, தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முள்ளக்காடு கிராம காங்கிரஸ் கமிட்டி வைகுண்டவாசகம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் கண்டன உரையாற்றி பேசும்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் குடும்பத்தில் இருந்து வந்த ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை ஏற்கமுடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடும் என்று பேசினார். கூட்டத்தில் மகாராஜன், ரத்தினபாண்டி, பிரியா, இசக்கியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

    • ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.கே.பெரியசாமி, செயலாளர் வர்கீஸ், இளைய பெருமாள், பொருளாளர் சந்திரதாசன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில், ஊராட்சி கடை களுக்கான அரசாணை யினை மறுபரிசீலனை செய்து நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாலாஜி, ஆலோசகர்கள் சரவணன், கணேசன், சீஜூ, சதானந்தம், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், ஏற்காடு பகுதி வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.

    வள்ளியூர் :

    முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நெல்லைகிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வள்ளியூர் செயலாளர் சேதுராமலிங்கம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை செயலாளர் ஜான் கென்னடி, பணகுடி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள்ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    கிழக்கு மாவட்ட அவைத் தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாள ரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தத்துவத்தின் அடையாளம். கட்சியையும், ஆட்சியையும் வளர்ச்சி அடைய செய்தவர். மிசா சட்டத்தில், திருமணமாகி 6 மாதத்தில் சிறை சென்றவர்.

    இந்தியா முழுவதும் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் உற்று நோக்குகின்றனர். கொரோனா காலத்தத்தில் மருத்துவர்களே செல்ல பயந்த கொரோனா வார்டில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியவர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இருந்தாலும் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மாதம் தோறும் பெண்கள் உரிமை தொகை ஆயிரம் ரூபாயை அண்ணா பிறந்தநாள் அன்று நிறைவேற்றுகிறோம்.

    தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கவில்லை. இருப்பினும் கொரோனா காலத்தில் தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியை கொடுத்தார்.அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.மேலும் 13 ஆயிரம் கோடியில் மாதிரி பள்ளிகள் அமைத்து சுகாதாரம், கல்வியும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து உள்ளார்.

    பேனா சிலை ஏன் வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். பெண் களுக்கு சொத்துரிமையில் பங்கு உண்டு என கையெழுத்து போட்டது, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கையெழுத்து மற்றும் பெண்களுக்கு கல்வி அதிகாரம் கொடுத்து கையெழுத்து போட்டது இந்த பேனா தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நாங்குநேரி எஸ்.ஏ.வி பெட்ரோல் பங்கில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்து 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை ஆ.ராசா திறந்து வைத்தார்.

    நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோஷல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆதி பரமேஸ்வரன், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலை கண்ணு , மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கொண்டனர்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி நன்றி கூறினார்.

    • பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்று வந்தது.
    • பிரமாண்ட மேடை மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கு பெரும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    பொதுக்கூட்டம் நடை பெறுவதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்று வந்தது.

    பிரமாண்ட மேடை மற்றும் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே .ஏ. ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், கே.எம். அருள் செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை எஸ். மாரியப்பன், அகில பாரத அய்யா வழி மக்கள் பேரியக்கம் ஸ்ரீவைகுண்ட வரகவி ஸ்ரீ குரு சிவச்சந்திரன் சுவாமிகள், மண்டல் பார்வையாளர் முருகேசன், சுரண்டை அருணாச்சலம், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம், தென்காசி நகர பொதுச்செயலாளர் யோகா சேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராம.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் எம்.எஸ்.ஷா பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவது உறுதி. தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியல் நடத்தி வருகிறது. இதனால் அந்த கட்சிகளின் தலைமைக்கு அவர்களது வாரிசுகளே வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வாரிசுகள் 150 கோடி இந்திய மக்கள் தான். நாட்டு மக்களுக்காக பிரதமர் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்காக பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கி உலக அரங்கில் வலிமை மிக்க நாடாக இந்தியாவை மாற்றி வருகிறார்.

    சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பயன்பெறுவார்கள்.

    உலகமே போற்றும் வகையில் சுய சார்பு இந்தியாவாக மோடி மாற்றி வருகிறார்.

    உள் நாட்டிலேயே ரெயில் பெட்டிகள், விமானங்கள், விமான உதிரி பாகங்கள், நவீன எந்திரங்கள் போன்றவை தயாரிக்கப்பட் டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பொருளாதார பிரிவு மாவட்டத்தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 

    • விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இந்து மதத்திற்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் தான். தி.மு.க.வினர் அல்ல என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    காமராஜ், நாவலர் நெடுஞ்செழியன், அண்ணா உள்ளிட்ட பெருந்தலைவர்கள் அங்கம் வகித்த சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் மிகவும் வருத்த மளிக்கிறது.

    தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இனியும் தொடர பிரதமரும், உள்துறை அமைச்சரும் அனுமதிக்க கூடாது.இந்து மதத்திற்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் தான். தி.மு.க.வினர் அல்ல. அண்ணாமலை சிறைக்கு செல்வீர்கள் என்று என்னை கூறி வருகிறார். ஜெயிலுக்கு தான் செல்ல வேண்டும் என்றால் செல்ல தயார். அங்கு சென்று புத்தங்களை படித்து கொள்வேன்.

    மார்கண்டேயனை சிறையில் அடைத்தால் பல்கலைக்கழகம் உருவாகும். அண்ணா மலையை சிறையில் அடைத்தால் பா.ஜனதா இல்லாமல் போகும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் வெள்ளைச்சாமி, ராதா கிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் மேற்கு செயலாளர்கள் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், இளைஞர் பேரவை துணை அமைப்பாளர் அருள் சுந்தர், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இமானுவேல், மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, மாரியம்மாள், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக வீரகனூர் கிளையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் பார்த்தசாரதி, வீரதனூரில் உள்ள வார்டு உறுப்பினர் சுமதி, வட்டாரத் தலைவிகள், பணியாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

    மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வட்டார பணியாளர் ஜமுனா வட்டாரத்தின் சிறப்புகளை பற்றி விளக்கி பேசினார். மேலும் வங்கி மேலாளர் பார்த்தசாரதி மகளிர் குழுவின் சிறப்பை பற்றியும், வங்கி கடனை திரும்ப செலுத்துதல் குறித்தும் பேசினார். முடிவில் வட்டாரத் தலைவி கல்யாணி நன்றி கூறினார். அனைவருக்கும் சிறுதானியம் வழங்கப்பட்டது.

    • அ.தி.மு.க. பிரிந்து கிடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்.
    • திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்க ளுக்கான திட்டங்களை செய்யாமல் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. வருகிற 2024-ல் பாராளு மன்ற தேர்தல் நடை பெற உள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அச்சப்படவில்லை.

    மீண்டும் தமிழகத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து உள்ளோம். மீண்டும் அவரது தலைமையில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சி அமைய உறுதி ஏற்போம்.

    மதுரை மாநகராட்சியில் திட்டங்கள் எதையும் செயல்படுத்த நிதி இல்லை. தி.மு.க. மத்திய அரசோடு மோதல் மனப்பான்மையைக் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த நிதியும் பெறாமல் மக்கள் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மொழியை வைத்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பூமிபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செய லாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் நாகரத்தினம், பாலமுருகன், பாலா, மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த தியாக வேள்வியில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்போர் விவரம் வருமாறு:-

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்-அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொன்னையன், அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா. வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ், சென்னை புறநகர் மாவட்டம்-இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி. ம.ராசு, மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-கொள்கை பரப்பு துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா. தென் சென்னை தெற்கு (மேற்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் அசோக்.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம்-அமைப்பு செயலாளர் பா.பென்ஜமின், திருவள்ளூர் வடக்கு மாவட்டம்-மருத்துவ அணி செயலாளர்

    டாக்டர் பி.வேணுகோபால், திரு வள்ளூர் கிழக்கு மாவட்டம்-மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்-மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி. காஞ்சீபுரம் மாவட்டம்-மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.பி.முனுசாமி

    கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில்-அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைைம நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர் தாமோதரன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் கே.பி.முனு சாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டம்-பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர் ஜக்கையன்.

    கடலூர் கிழக்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்-கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் தம்பிதுரை, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நாமக்கல் மாவட்டம்-அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, திருப்பூர் மாநகர் மாவட்டம்-தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்.

    விழுப்புரம் மாவட்டம்-அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், சேலம் மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செம்மலை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கோவை புறநகர் வடக்கு மாவட்டம்-முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செல்வராஜ்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்-அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் மேற்கு மாவட்டம்- அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நெல்லை மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சி.த. செல்லப்பாண்டியன், முருகையா பாண்டியன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×