search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajan chellappa mla"

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி வழிகாட்டுதல்படி நாம் பூத் கமிட்டி அமைத்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி செல்லும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டியில் அதிகமான பெண்கள் பணியாற்றியதால் 30,000 வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெற்றேன்.

    தேவர் ஜெயந்தி விழா விற்கு எடப்பாடியார் வர முடியுமா என்று கேட்டார் கள். ஆனால் அங்கு வந்தார். குறிப்பாக அ.தி.மு.க. என்பது எதிர்ப்பு அரசியலை கொண்டுதான் வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட் சித்தலைவி அம்மா ஆகி யோரை தொடர்ந்து எடப் பாடியாரும் வெற்றி பெற் றார்.

    இன்றைக்கு தலைமை கழகம் சின்னம் ஆகியவற்றை இழந்த ஓ.பி.எஸ். தூண்டுத லால் சிலர் கோஷம் போட்ட னர். அதையெல்லாம் எடப் பாடியார் முறியடித்து உள் ளார். தேவர் ஜெயந்தி விழா வில் குருபூஜையில் ஸ்டா லின் விபூதியை கூட வாங்கா மல் மரியாதை கொடுக்க வில்லை. ஆனால் எடப்பாடி யார் தேவர் காலில் விழுந்து வணங்கி உரிய மரியாதை அளித்தார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி வேல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்முருகன், பாலா, எம்.ஆர்.குமார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும்; ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
    • தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் தேர் இழுத்து வழிபட்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியிடம் ஈர்ப்பு சக்தி உள்ளது. அவரால் மட்டுமே தொண்டர்களை வழிநடத்தி அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். இதற்காக அவரது உத்தரவின் பேரில் கட்சி பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

    ஒரு சிலரை தவிர அனைவரும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். இங்கிருந்து போனவர்களும் விரைவில் இரட்டை இலை இருக்கக்கூடிய எங்களிடம் வந்து சேருவார்கள்.

    தமிழக அமைச்சரவை மாற்றம் ஏமாற்றமானது. தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., பகுதி துணை செயலாளர் செல்வகுமார் ஒன்றிய கவுன்சிலர் தவமணி மாயி, வட்ட செயலாளர்கள் பொன்முருகன், பாலா, நாகரத்தினம் எம்.ஆர்.குமார் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. பிரிந்து கிடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்.
    • திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்க ளுக்கான திட்டங்களை செய்யாமல் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. வருகிற 2024-ல் பாராளு மன்ற தேர்தல் நடை பெற உள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அச்சப்படவில்லை.

    மீண்டும் தமிழகத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து உள்ளோம். மீண்டும் அவரது தலைமையில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சி அமைய உறுதி ஏற்போம்.

    மதுரை மாநகராட்சியில் திட்டங்கள் எதையும் செயல்படுத்த நிதி இல்லை. தி.மு.க. மத்திய அரசோடு மோதல் மனப்பான்மையைக் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த நிதியும் பெறாமல் மக்கள் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மொழியை வைத்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பூமிபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செய லாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் நாகரத்தினம், பாலமுருகன், பாலா, மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #edappadipalanisamy

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி திருநகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாமை அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் சிறப்பான ஆட்சியால் கவரப்பட்ட இளைஞர்கள் தமிழகமெங்கும் ஆர்வமுடன் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போது அதிக அளவிலான பெண்கள், இளைஞர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே அதிகமாக வாக்காளர் இணைப்பு நடைபெற்ற பகுதி திருப்பரங்குன்றம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. சி.பி.ஐ. குறித்து அவரது தந்தையே பலமுறை விமர்சனம் செய்துள்ளார்.

    முதல்வர் மீது குற்றம் ஏதும் நிரூபிக்காத நிலையில் அவரை ராஜினாமா செய்யச் சொல்வது தவறான செயலாகும். எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை பற்றி தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை.

    இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழக மக்கள் அனைவரும் ஜெயலலிதா வழியிலான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், முனியாண்டி, வட்டச் செயலாளர் பாலமுருகன், பாசறை செல்வகுமார், பலராமன் மனோகரன், ஜெயமுருகன், குமார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #edappadipalanisamy

    புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் 9 மற்றும் 23-ந்தேதிகளில் சிறப்பு முகாமை அறிவித்துள்ளது.

    எனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், சோழவந்தான், மதுரை கிழக்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் உரிய வாக்காளர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்றிட வேண்டும். வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் போன்றவற்றில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

    வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு முகாம்களில் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் பணியாற்றிட வேண்டும். மாவட்ட, பகுதி, நகர், பேரூர், ஒன்றிய, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசினார். #thiruparankundramconstituency

    மதுரை:

    முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சிலைமான், எஸ். புளியங்குளம், விரகனூர், ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கினார்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. விற்கு என்று ஒரு தனி வரலாறு உள்ளது 2017-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் அம்மாவின் ஆசியுடன் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 43ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா மக்கள் அளப்பரியாண பற்றும் பாசமும் வைத்துள்ளனர்.

    இதனை எண்ணிப் பாராமல் தி.மு.க.வும் தினகரனும், சில எதிர்க் கட்சிகளும் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று ஊடகங்கள் வாயிலாக சவால் விட்டு வருகின்றனர். அவர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கூறுகிறேன்.

    நாங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம், தோப்பூரில் 10 ஆயிரம் வீடுகள் கொண்ட துணைக்கோள் நகரத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் பஸ்போர்ட்டை திருப்பரங்குன்றம் தொகுதியில் உருவாக்க உள்ளோம். இது மட்டுமல்லாது ரூ.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார் என்று மக்களிடத்தில் நாங்கள் எடுத்துரைத்து வெற்றி பெறுவோம்.

    ஆர்.கே.நகருக்கே செல்ல முடியாமல் வார்த்தை ஜாலமிடும் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    இவர் எந்த சாதனையை சொல்லி மக்களிடத்தில் வாக்கு கேட்பார். ஒரு சாதனையும் செய்யாத எதிர்கட்சிகளெல்லாம் வெற்றி பெறுவோம் என்று கூறி வருவது மாயை ஆகும். மக்களும் இதை ஒரு போதும் நம்ப மாட்டார்கள் .

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட பொருளாளர் அம்பலம், மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தலைமை தாங்கினர். ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முருகன் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், அவனியாபுரம் பகுதி செயலாளர் முனியாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் பூமிபாலகன், முன்னாள் அம்மா பேரவை செயலாளர் பாரி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thiruparankundramconstituency 

    ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேசியுள்ளார். #Rajinikanth #karunanidhideath

    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. கொடுத்துள்ளது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆட்சியை செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை மற்றும் கொடி இருக்கும் வரை யாரும் அசைக்க முடியாது.

    அ.தி.மு.க.வின் எதிரியாக கருணாநிதியைத்தான் அடையாளம் காட்டி சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார்.

    காந்தி இடத்தில் கோட்சே படமும், ராமனிடத்தில் ராவணன் படமும் எவ்வாறு வைக்க முடியாதோ அதுபோல எம்.ஜி.ஆர். அருகே கருணாநிதியை வைக்க முடியாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு ஏராளமான தாய்மார்கள் வந்திருந்தனர். அதே சமயத்தில் கருணாநிதி மறைவிற்கு ஒரு சிலரே பெண்கள் வந்திருந்தார்கள். தாய்மார்கள் ஆதரவு எப்போதுமே அ.தி.மு.க.விற்கு தான். மெரினாவில் கருணாநிதியின் சமாதி அமைய மக்கள் ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் மக்கள் அவரை முதல்வராக்கி இருப்பார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க. அதுபோல திருப்பரங்குன் றம் தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெரும்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏமாந்தது போல், இங்குள்ள மக்கள் ஏமாற மாட்டார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.போசுக்காக எதிரணியினர் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அவரை விமர்சிக்க வேண்டிய சூழல் வரும். வெற்று மாயைகளை மக்கள் நம்பமாட்டார்கள்

    இவ்வாறு அவர் பேசினார். #Rajinikanth #karunanidhideath

    மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்துதரக் கேட்டு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணியில் மலர் வணிக வளாகம், நெல் வணிக வளாகம் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இன்று காலை மதுரை வடக்குசட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பூ மார்க்கெட் சென்று ஆய்வு செய்தார். அவரை பூக்கடை ராமச்சந்திரன், முத்து ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து வணிக வளாகம் முழுவதையும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சுற்றிப்பார்த்தார். அப்போது அவரிடம் வியாபாரிகள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கடைகளை ஒதுக்கிய வியாபாரிகளுக்கு பத்திரப்பதிவு செய்து தரவும் கேட்டுக் கொண்டனர்.

    வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

    இந்த ஆய்வின் போது புறநகர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணாநகர் முருகன், அபுதாகீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் பார்முலா எடுபடாது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார். #dinakaran

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீதிபதி எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் நிலையூர் முருகன், அம்பலம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது. ஆனால் இந்த அரசு செயல்படாத அரசு என எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தை கூறி வருகின்றன. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தமிழகத்தில் இனி அ.தி. மு.க. ஆட்சிக்குவராது என சிலர் கற்பனை உலகில் மிதக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்- அமைச்சராகிவிட வேண்டும் என துடிக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது.

    மதுரை எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு இடைத்தேர்தல் மீண்டும் வந்து இருக்கிறது. அங்கு கழகத்தின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். மற்ற அனைத் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நாங்கள் அமைத்துக் கொடுத்த முன்னுரை காரணமாக அங்கே ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார்.


    அதேபோல் திருப்பரங்குன்றத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் செல்லப்பிள்ளைகள் நிறைந்த திருப்பங்குன்றம் தொகுதி என்றும் இரட்டை இலை பக்கம்தான் இருக்கும்.

    ஆர்.கே.நகரில் வகுக்கப்பட்ட பார்முலா நிச்சயம் திருப்பரங்குன்றத்தில் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றார்.

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரம், திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் அம்மா வழியில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலு சேர்க்கும் வகையில் அயராது உழைக்க வேண்டும்.

    1½ கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக திகழும் அ.தி.மு.க.வை மேலும் வலிமையாக்க இளைஞர்களையும், பொதுமக்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

    குறிப்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பொதுமக்களை சந்தித்து கட்சியில் சேர்க்க உழைக்க வேண்டும்.

    எந்த தேர்தல் வந்தாலும் அதில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். அதற்கேற்ப நாம் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், முத்துக்குமார், முனியாண்டி, ராமகிருஷ்ணன், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. வின் திட்டங்களை கட்சியினர் வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வரும் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசினார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் ரமேஷ் பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் வாரியத்தலைவர் பூமி பாலகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    1972 முதல் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது. அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியை வழி நடத்தி மக்கள் நலத் திட்டங்களை குறை வில்லாமல் சிறப்புடன் செய்து வருகின்றனர். தாலிக்கு தங்கம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் பொது மக்களை தேடி செல்கிறது.

    இதுபோன்ற அ.தி.மு.க. வின் திட்டங்களை கட்சியினர் வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வரும் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சந்திரன், முன்னாள் அறங்காவலர் பாரி, ஜெயக்குமார், கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு தொகுதியில் ரூ. 67.36 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மதுரை:

    மதுரை வடக்குத் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.67.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று திறந்து வைத்தார்.

    மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட முனியாண்டி கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சத்தியமூர்த்தி ஜீவா தெருவில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சத்தியமூர்த்தி பிரதான தெரு மற்றும் தெற்கு குறுக்குத் தெருவில் தமிழ் நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.27.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    மேலும் சர்ச்ரோடு மற்றும் சக்திமாரியம்மன் கோவில் தெருவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக்சாலையினையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தெருவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப் பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

    வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.67.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×