search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்- மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்
    X

    அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்- மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்

    • இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த தியாக வேள்வியில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்போர் விவரம் வருமாறு:-

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்-அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொன்னையன், அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா. வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ், சென்னை புறநகர் மாவட்டம்-இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி. ம.ராசு, மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-கொள்கை பரப்பு துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா. தென் சென்னை தெற்கு (மேற்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் அசோக்.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம்-அமைப்பு செயலாளர் பா.பென்ஜமின், திருவள்ளூர் வடக்கு மாவட்டம்-மருத்துவ அணி செயலாளர்

    டாக்டர் பி.வேணுகோபால், திரு வள்ளூர் கிழக்கு மாவட்டம்-மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்-மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி. காஞ்சீபுரம் மாவட்டம்-மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.பி.முனுசாமி

    கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில்-அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைைம நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர் தாமோதரன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் கே.பி.முனு சாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டம்-பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர் ஜக்கையன்.

    கடலூர் கிழக்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்-கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் தம்பிதுரை, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நாமக்கல் மாவட்டம்-அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, திருப்பூர் மாநகர் மாவட்டம்-தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்.

    விழுப்புரம் மாவட்டம்-அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், சேலம் மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செம்மலை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கோவை புறநகர் வடக்கு மாவட்டம்-முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செல்வராஜ்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்-அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் மேற்கு மாவட்டம்- அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நெல்லை மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சி.த. செல்லப்பாண்டியன், முருகையா பாண்டியன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×