search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ."

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி வழிகாட்டுதல்படி நாம் பூத் கமிட்டி அமைத்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி செல்லும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டியில் அதிகமான பெண்கள் பணியாற்றியதால் 30,000 வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெற்றேன்.

    தேவர் ஜெயந்தி விழா விற்கு எடப்பாடியார் வர முடியுமா என்று கேட்டார் கள். ஆனால் அங்கு வந்தார். குறிப்பாக அ.தி.மு.க. என்பது எதிர்ப்பு அரசியலை கொண்டுதான் வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட் சித்தலைவி அம்மா ஆகி யோரை தொடர்ந்து எடப் பாடியாரும் வெற்றி பெற் றார்.

    இன்றைக்கு தலைமை கழகம் சின்னம் ஆகியவற்றை இழந்த ஓ.பி.எஸ். தூண்டுத லால் சிலர் கோஷம் போட்ட னர். அதையெல்லாம் எடப் பாடியார் முறியடித்து உள் ளார். தேவர் ஜெயந்தி விழா வில் குருபூஜையில் ஸ்டா லின் விபூதியை கூட வாங்கா மல் மரியாதை கொடுக்க வில்லை. ஆனால் எடப்பாடி யார் தேவர் காலில் விழுந்து வணங்கி உரிய மரியாதை அளித்தார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி வேல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்முருகன், பாலா, எம்.ஆர்.குமார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பிரிந்து கிடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்.
    • திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்க ளுக்கான திட்டங்களை செய்யாமல் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. வருகிற 2024-ல் பாராளு மன்ற தேர்தல் நடை பெற உள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அச்சப்படவில்லை.

    மீண்டும் தமிழகத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து உள்ளோம். மீண்டும் அவரது தலைமையில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சி அமைய உறுதி ஏற்போம்.

    மதுரை மாநகராட்சியில் திட்டங்கள் எதையும் செயல்படுத்த நிதி இல்லை. தி.மு.க. மத்திய அரசோடு மோதல் மனப்பான்மையைக் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த நிதியும் பெறாமல் மக்கள் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மொழியை வைத்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பூமிபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செய லாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் நாகரத்தினம், பாலமுருகன், பாலா, மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×