search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Assembly"

    • சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது.

    அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து 3 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டியன், ஆற்காடு அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், தனராஜ், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், சேர்மன் பால்பாண்டி, ரகுபதி, பொதுகுழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர்கள் லதாகண்ணன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, வசந்தகோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துசெல்வி சதீஷ், கொத்தாளம் செந்தில் குருசாமி, சிவா, ஊராட்சி தலைவர்கள் சிறுமணி, துணை தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.
    • மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க பொதுகுழு உறுப்பி னர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் இல.சு.மணி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஆடுதுறை நசீர் முகமது, ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம், மாநிலங்க ளவை உறுப்பினர் மு. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி. இரா. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வன், மாநில அயலக அணி துணை செயலாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் துரைமுருகன், ஜெயலட்சுமி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் இராமபிரபு, சிவ.மணிமாறன், பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை.மணிமாறன், சரபோஜி ராஜபுரம் கிளை செயலாளர் பழ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா ர்கள்.

    கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 15 வது தி.மு.க பொது தேர்தலில் மீண்டும் கழக தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினையும் அவர்களையும், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பொது குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் சு.கல்யாணசுந்தரம் அவர்களையும், மாவட்ட கழக நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்த தி.மு.க தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்க ளை தெரிவித்து கொள்வதெனவும், புதிய உறுப்பினர்களை கிளைகள் தோறும் அதிக அளவில் சேர்ப்பது என்றும்.

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி முகவர்க ளையும், வாக்குச்சாவடிக்கு 10 உறுப்பினர்கள் கொண்ட நிலை குழு உறுப்பினராக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பது எனவும், கிளை கழகம் தோறும் அனைத்து கிளைகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது எனவும், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் நன்றி கூறினார்.

    • மதுரை பழங்காநத்தம் பகுதியில் வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 29-ந் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 29-ந் தேதி மதுரை வருகிறார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தி.மு.க. தற்போது மக்கள் மனதில் நம்பிக்கை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    விலைவாசி உயர்வால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். அவரால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

    வருகிற 29-ந் தேதி மாலை மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, பொன். ராஜேந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன், எம். ஆர். குமார், பாலா, எம்.ஜி. பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் காந்திசிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, காளிமுத்து, பரமக்குடி அவைத்தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் எம்.கே.ஜமால் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

    இக்கூட்டத்தில் அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, டாக்டர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாலாமணி மாரி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிதா முருகேசன், நகர்மன்றத் உறுப்பினர்கள் ஜெய்சங்கர், கண்ணன் உட்பட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர் அம்மா பேரவை செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வடமலையான் நன்றி கூறினார். 

    • மதுரை சோழவந்தானில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி இந்த கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.

    தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகை ரஜினி நிவேதா, தலைமை கழக பேச்சாளர் சின்னையா ஆகியோர் பேசினர்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ரவிசந்திரன், ராஜா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவர் அணி கருப்பையா, மணி, மகளிரணி லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி 14-வது ஆண்டு தொட தினம் மற்றும் வெறுப்பு அரசியல் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாள ர் அப்துல்ராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது முஹைதீன் அனைவரையும் வரவேற்றார்.

    ஆலங்குடி தொகுதி து ணைத் தலைவர் ராயல் கனி எஸ்டிபிஐ கட்சியின் அப்துல் சுபஹான், மருத்துவர் அணி தலைவர் டி எஸ் எம் ஜமால்முகமது ஆகியோர் முன் னிலையில் வகித்தனர்.

    மயானம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆலங் குடி அரசமரம் மற்றும் பழைய நீதிமன்றம் அருகில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்தவும், ஆலங்குடியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட தலைவர்கள் ஸலாஹுதீன், நபிஷா பேகம், அபூபக்கர் சித்திக் , மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆலங்குடி கிளை தலைவர் பீர் முகமது நன்றி கூறினார்.

    • நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என்று நீதிபதி கூறினார்.
    • வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓபிஎஸ் சார்பில் தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்த ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜூலை 11-ம் தேதி உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் விதமாக செயல்பாடு உள்ளது எனவும் அவர் கூறினார். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் முறையிட்டு இருக்கலாம். ஆனால் இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என்றும் அவர் கூறினார்.

    மேலும், அதிமுக பொதுக்குழு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரணை நடத்துகிறார். வைரமுத்து தரப்பில் கோரிக்கையை ஏற்று வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீவாரி மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு.
    • அமமுக துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) சார்பில்  செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    இந்த பொதுக்குழு கூட்டம், துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பொது இடங்–களில் பொது–மக்–களை பாதிக்–கும் வகை–யில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அரசியல் கட்சியினர் மற்றும் மத அமைப்பினர் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

    பொது இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது. திருமணம், துக்க நிகழ்வு, வழிபாட்டு முறைகளுக்கு எந்தவித தடையும் இல்லை. காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது.
    • அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்ட ஓபிஎஸ் வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

    அதன்படி, ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.

    வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்னி பாத் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக அனைவரையும் ஒன்றிய தலைவர் டி ஆர் தவமணி வரவேற்றார்.அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பொதுக் கூட்டத்தில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட மேற்பார்வையாளர் புரட்சி கவிதாசன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஜயகுமார், முரளி, பார்த்திபன், மாவட்ட பொருளாளர் சுகன்யா, மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பவுன்ராஜ் நன்றி கூறினார்.

    • ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆவின் சேர்மனும், மாவட்ட பேரவை செயலாளருமான அசோகன், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    ×