search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம்
    X

    கந்தர்வகோட்டையில் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம்

    • மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்னி பாத் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக அனைவரையும் ஒன்றிய தலைவர் டி ஆர் தவமணி வரவேற்றார்.அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பொதுக் கூட்டத்தில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட மேற்பார்வையாளர் புரட்சி கவிதாசன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஜயகுமார், முரளி, பார்த்திபன், மாவட்ட பொருளாளர் சுகன்யா, மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பவுன்ராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×