search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extension"

    • மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
    • ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப

    தாவது:-

    நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையில் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைனில் 14-6-2018 முதல் 13-9-2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட்டால் விதிக்கப்பட்ட தடையை நீக்க மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இதில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், 22-3-2021 முதல் 4-4-2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு அரசால் 24-6-2022 முதல் 31-12-2022 வரை வழங்கப்பட்டது.

    தற்போது இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக 30-6-2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற தஞ்சை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

    இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    மதுரை

    செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சேரும்.

    இந்த ரெயில்கள் நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    • மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தது.

    மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பயிற்சி மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 13-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு 2-ம் கட்டமாக நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

    மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான கம்மியர் மோட்டர் வாகனம், நில அளவையாளர், மின்சாரப் பணியாளர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.

    மாணவர்கள் 13-ந்தேதி வரை மானாமதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் வளாகம், பாப்பாமடையில் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.

    பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9865554672 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 30.12.2022 வரை 33ஆயிரத்து330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும், 5ஆயிரத்து661 விவசாயி களுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பின் மூலமா கத்தான் இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குவதில் சாதனை படைத்துள்ளோம்.பயிர் கடன் ஆரம்ப காலத்தி லேயே கொடுக்கும் பட்சத்தில் மற்றும் ஆண்டுதோறும் இதே நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மீது விவசாயிகளிடையே நம்பிக்கை வளரும்.

    இதன் மூலம் இடைத்தர கர்களின்றி விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ஆரம்ப காலங்களில் பயிர் கடன் வழங்குவதால் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியும். கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 லட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 லட்சம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 5-ல் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை பயிர்கடன் வழங்கி உள்ளோம். பயிர்கடன் அளவை உயர்த்தும் வகையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவின் மூலம் பயிர் கடன் அளவை அனைத்து பயிர்களுக்கும் 25 சதவீதம் உயர்த்தியும், பயிர் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை 1 வருடமாக உயர்த்தியும் மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆண்டிற்கான நெற்பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.1.2023 வரை நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ் கோடி, கூட்டுறவு சங்கங் களின் துணை பதிவாளர்கள் சுப்பையா (ராமநாதபுரம் சரகம்), கோவிந்தராஜன் (பொது விநியோகத் திட்டம்), முருகன் (தாம்கோ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்ட துணை இயக்குநர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவமனை கட்டடமாக தகவமைப்பு செய்து தர கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில், வரப்பெற்ற 204 கோரிக்கைகளில், 48 கோரிக்கைகள் வட்டார அளவிலும், 143 கோரிக்கைகள் மாவட்ட அளவிலுள்ள நிதியின் மூலமாக தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இக்கோரிக்கைகளில் 13 கோரிக்கைகள் மட்டும் மாநில நிதி மூலம் மட்டுமே தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. 13 கோரிக்கைகளுக்கு உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

    திருவாரூர் பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் செயல்பாடின்றி உள்ளது. அதனை அகற்றிவிட்டு 100 படுக்கைகள் கொண்ட புதிய மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும். விஜயபுரம் மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.

    மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீரை என்பது சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதன்மூலம் திருவாரூர் பொதுமக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

    நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைனமதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய-மாநில அரசால்அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு

    பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன்மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந் தேதி வரைநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற 15-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில்உள்ள மாவட்ட

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகரில் பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் வந்து விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாளையங்கால்வாயில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் இருந்து நத்தம் வரையிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் வந்து விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விரிவாக்கம் செய்யும் பணி

    தற்போது பாளையங்கால்வாயில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் இருந்து நத்தம் வரையிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மும்முரமாக நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக பாளையங்கால்வாய் ஓரத்தில் மண் கொட்டப்பட்டு அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புகார்

    மறுபுறத்தில் சாலையை அகலப்படுத்தாமல், பாளையங்கால் வாயில் மண்ணை கொட்டி அகலப்படுத்துவதால் கால்வாயின் அகலம் குறைவதோடு தண்ணீர் செல்லும் நீர் வழி பாதையும் சுருங்குகிறது என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜபார் கூறியதாவது:-

    ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் கலெக்டர் அலுவலகம் எதிரே பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக அமைத்து வருகிறார்கள்.

    கடந்த காலங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி இடிக்கப்பட்ட நிலையில் தற்போது பொழுதுபோக்கு பூங்கா கட்டப்பட்டு வருகிறது.இதனால் தாமிரபரணி நதி அகலம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான் குளத்திலும் மண் கொட்டப்பட்டு படகு குளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாளை யங்கால்வாயில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மண் கொட்டப்பட்டுள்ளது. இதனை எங்களது கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சாலை விரிவாக்கம் செய்வதற்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • நெல்லை - மேட்டுப்பாளையம்ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரெயில் சேவையை வருகிற ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.

    மறுமார்க்கத்தில் செப்டம்பர் 2-ந் தேதி முதல் ஜனவரி 27-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு நெல்லை செல்லும்.

    இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவையில் நின்று செல்லும். நெல்லையில் இருந்து செல்லும் ரெயில், போத்தனூரிலும் நிற்கும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மதுரை - செகந்திராபாத் ெரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை-செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில், ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் சேவை, செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி செகந்திரா–பாத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணா–மலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது.
    • விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது.

    சேலம்:

    இந்திய அரசின் சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் முதுநிலை பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்றும், அவர்களின் நலன் கருதியும் நெட் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்பு செய்து, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை மறுநாள் (17-ந்தேதி) கடைசி நாள் ஆகும். அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தகவலை இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

    • பட்டிய பயிற்சி விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் தற்போது பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெறுவதற்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சாத்தூர் மேலாண்மை நிலையத்திற்கு தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

    பயிற்சி கட்டணம் ரூ.18 ஆயிரத்து 850 ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய முதல்வரை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    ×