search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
    X

    ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வு கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.

    நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

    • நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 30.12.2022 வரை 33ஆயிரத்து330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும், 5ஆயிரத்து661 விவசாயி களுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பின் மூலமா கத்தான் இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குவதில் சாதனை படைத்துள்ளோம்.பயிர் கடன் ஆரம்ப காலத்தி லேயே கொடுக்கும் பட்சத்தில் மற்றும் ஆண்டுதோறும் இதே நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மீது விவசாயிகளிடையே நம்பிக்கை வளரும்.

    இதன் மூலம் இடைத்தர கர்களின்றி விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ஆரம்ப காலங்களில் பயிர் கடன் வழங்குவதால் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியும். கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 லட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 லட்சம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 5-ல் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை பயிர்கடன் வழங்கி உள்ளோம். பயிர்கடன் அளவை உயர்த்தும் வகையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவின் மூலம் பயிர் கடன் அளவை அனைத்து பயிர்களுக்கும் 25 சதவீதம் உயர்த்தியும், பயிர் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை 1 வருடமாக உயர்த்தியும் மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆண்டிற்கான நெற்பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.1.2023 வரை நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ் கோடி, கூட்டுறவு சங்கங் களின் துணை பதிவாளர்கள் சுப்பையா (ராமநாதபுரம் சரகம்), கோவிந்தராஜன் (பொது விநியோகத் திட்டம்), முருகன் (தாம்கோ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×