search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை - மேட்டுப்பாளையம் ரெயில் சேவை நீட்டிப்பு
    X

    நெல்லை - மேட்டுப்பாளையம் ரெயில் சேவை நீட்டிப்பு

    • நெல்லை - மேட்டுப்பாளையம்ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரெயில் சேவையை வருகிற ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.

    மறுமார்க்கத்தில் செப்டம்பர் 2-ந் தேதி முதல் ஜனவரி 27-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு நெல்லை செல்லும்.

    இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவையில் நின்று செல்லும். நெல்லையில் இருந்து செல்லும் ரெயில், போத்தனூரிலும் நிற்கும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×