search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை - செகந்திராபாத் ரெயில் சேவை நீட்டிப்பு
    X

    மதுரை - செகந்திராபாத் ரெயில் சேவை நீட்டிப்பு

    • மதுரை - செகந்திராபாத் ெரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை-செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில், ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் சேவை, செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி செகந்திரா–பாத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணா–மலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×