search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் ஒப்புதல் பெற விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் ஒப்புதல் பெற விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

    • மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
    • ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப

    தாவது:-

    நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையில் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைனில் 14-6-2018 முதல் 13-9-2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட்டால் விதிக்கப்பட்ட தடையை நீக்க மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இதில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், 22-3-2021 முதல் 4-4-2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு அரசால் 24-6-2022 முதல் 31-12-2022 வரை வழங்கப்பட்டது.

    தற்போது இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக 30-6-2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற தஞ்சை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

    இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×